ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு | அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் |
இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது பெரும் லட்சியமாக இருக்கும். அந்நிய மண்ணில் அதுவும் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நேற்று பந்து வீசிய விதத்தைப் பார்த்து பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, நேற்றைய லார்ட்ஸ் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
“மிகவும் சுவாரசியமாக உள்ளது” என கடைசி கட்ட பரபரப்பின் போதும், அடுத்து வெற்றி பெற்றதும், 'யெஸ்ஸ்ஸ்ஸ்” என்றும், பின்னர் “எப்பேர்ப்பட்ட வெற்றி, என்ன ஒரு அருமையான டீம்” என்றும் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.