மீண்டும் இணையும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா! நாளை பர்ஸ்ட் லுக்! | 'துரந்தர்' 2ம் பாகத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்! - பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் | 'இருமுடி' படத்தில் காவேரி ஆக பிரியா பவானி சங்கர்! | பாலகிருஷ்ணா 111வது படத்தில் நயன்தாரா மாற்றமில்லை! | நானி, வெங்கி அட்லூரி கூட்டணி படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? | பான் இந்தியா படங்களோடு மோதும் கென் கருணாஸின் 'யூத்' | மீண்டும் விஜய் பட தலைப்பில் புதிய பட அறிவிப்பு! | "எமோ எமோ இதி" ரோசன் மெக்கா, பிரீத்தி முகுந்தன் புதிய தெலுங்கு பட அறிவிப்பு! | "மகான் 2ம் பாகம் உருவாகிறது" - கார்த்திக் சுப்பராஜ் தகவல்! | சிவகார்த்திகேயன் படத்தில் கதாநாயகி, இசையமைப்பாளர் யார் தெரியுமா? |

இங்கிலாந்து அணிக்கெதிராக நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் முடிவடைந்த இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.
டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கும் வரலாற்று சிறப்பு மிக்க லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற வேண்டும் என்பது பெரும் லட்சியமாக இருக்கும். அந்நிய மண்ணில் அதுவும் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் நேற்று பந்து வீசிய விதத்தைப் பார்த்து பல முன்னாள், இந்நாள் கிரிக்கெட் வீரர்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியின் மனைவியும், நடிகையுமான அனுஷ்கா சர்மா, நேற்றைய லார்ட்ஸ் வெற்றி குறித்து மிகவும் மகிழ்ந்து இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.
“மிகவும் சுவாரசியமாக உள்ளது” என கடைசி கட்ட பரபரப்பின் போதும், அடுத்து வெற்றி பெற்றதும், 'யெஸ்ஸ்ஸ்ஸ்” என்றும், பின்னர் “எப்பேர்ப்பட்ட வெற்றி, என்ன ஒரு அருமையான டீம்” என்றும் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.