மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி |
தோனியின் வாழ்க்கை படத்தில் நடித்து பிரபலமானவர் ஹிந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தற்போது டிரைவ், கேதர்நாத் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். கேரளாவை புரட்டிப்போட்ட பேய் மழையால் அந்த மாநிலம் நிலைகுலைந்து போய் உள்ளது.
கேரளா பாதிப்பு குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டிருந்த சுஷாந்த், அனைவரும் முடிந்த அளவு கேரளாவுக்கு உதவுங்கள் என வேண்டுகோள் வைத்தார். சுபம்ரஞ்சன் என்பவர், என்னிடம் பணம் இல்லை, உணவு அளிக்கிறேன், எப்படி கொடுப்பது என கேட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்த சுஷாந்த், கவலைப்படாதீர்கள், உங்கள் பெயரில் நான் ஒரு கோடி அளிப்பேன், என கூறி கேரள முதல்வரின் வெள்ள நிவாரணத்திற்கு ஒரு கோடி நிதி உதவி அளித்து, அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டதோடு, என்னை இந்த உதவியை செய்ய தூண்டிய சுபம்ரஞ்சனுக்கு நன்றி என பதிவிட்டிருக்கிறார்.