சூர்யா படத்துக்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் | இப்போதும் நான் தான் வீட்டிற்கு பால் வாங்கி வருகிறேன் : பஹத் பாசில் | 'கருடன்' படத்திற்கு வியாபார வட்டத்தில் வரவேற்பு | அக்கா வேடத்தில் நடிக்க நயன்தாராவுக்கு இவ்வளவு சம்பளமா? | 'ஸ்டார்' படம் முதல் நாள் வசூல் எவ்வளவு ? | 'பாகுபலி 3' போன்று 'கேஜிஎப் 3' பற்றியும் வெளியான புதிய தகவல் | தெலுங்கு படங்களில் நடிப்பதில் உள்ள சங்கடம் இதுதான் : சம்யுக்தா | என்டிஆருக்கு பாரதரத்னா : சிரஞ்சீவி விருப்பம் | 'தி கோட்' - அமெரிக்கா புறப்பட்ட விஜய் | மே 31ல் திரைக்கு வரும் கருடன் திரைப்படம் |
பால்கி இயக்கத்தில் அபிஷேக் பச்சன் நடிப்பில் வெளியாகி உள்ள படம் ‛கூமர்'. முன்னதாக ஒரு பேட்டியில் இந்திய இளைஞர்கள் பெற்றோருடன் ஒரே வீட்டில் வசிப்பது குறித்து கேள்விக்கு பதிலளித்த அபிஷேக், ‛‛சமூகம், கலாச்சாரம் எல்லாம் மாறி வருகின்றன. இன்றைய காலத்தில் குடும்பத்துடன் நேரம் செலவிடுவது குறைவே. என்னால் என் பெற்றோரை விட்டு தனியாக வாழ்வதை நினைத்து கூட பார்க்க முடியாது. இந்த வயதில் பெற்றோரை நாம் தான் பார்த்து கொள்ள வேண்டும். கடவுள் அருளால் என் பெற்றோர் இன்னும் சுறுசுறுப்புடன் ஆரோக்கியமாக உள்ளனர். கூட்டு குடும்பம் என்பது இந்திய கலாச்சாரத்தின் ஒரு அங்கம். ஒருவேளையாவது குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு, சிரித்து பேசி மகிழ வேண்டும். 47 வயதில் நான் பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருப்பது என் அதிர்ஷ்டம்'' என்றார்.