காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் | பெரும் வரவேற்பைப் பெற்ற 'நாகபந்தம்' டீசர் |

பாலிவுட்டின் முன்னணி நடிகர் அக்ஷய் குமார். தற்போது செல்பி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப்படம் நாளை(பிப்., 24) வெளியாக உள்ள நிலையில் படத்தின் புரொமோஷன் முழுவீச்சில் நடந்தது. இந்த படத்தின் ஒருபகுதியாக ரசிகர்களுடன் செல்பி எடுக்கும் நிகழ்வு நடந்தது. இதில் கின்னஸ் சாதனை படைத்துள்ளார் அக்ஷய். அதாவது மூன்று நிமிடத்தில் 184 செல்பி எடுத்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதற்கான சான்றும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுபற்றி அக்ஷய் கூறுகையில், ‛‛இந்த தருணம் வரை நான் இதுவரை சாதித்த அனைத்து விஷயங்களிலும், எல்லா இடங்களிலும் என் உடன் இருப்பது ரசிகர்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவே காரணம். இது அவர்களுக்கான என் சிறப்பு பரிசு. அனைவருக்கும் நன்றி. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது, இதை நான் என்றென்றும் நினைவில் வைத்திருப்பேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.




