டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஷ்மிதாசென். இவரது திரையுலக பயணத்தில் பல துணிச்சலான, சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அந்தவகையில் தற்போது முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுஷ்மிதா சென். ‛டாலி' என்கிற பெயரில் பிரபல சமூக ஆர்வலரான திருநங்கை ஸ்ரீகவுரி சாவந்த் என்பவரின் வாழ்க்கையை தழுவி உருவாகும் வெப் தொடர் ஒன்றில் தான் சுஷ்மிதா சென் இந்த அவதாரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரை ரவி ஜாதவ் என்பவர் இயக்குகிறார். தற்போது இந்த வெப் தொடரில் திருநங்கையாக நடிக்கும் அவரது புகைப்படம் ஒன்றும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இதன் ஓரிஜினல் கதாபாத்திரமான ஸ்ரீகவுரி சாவந்த் கூறும்போது, 'திருநங்கை கதாபாத்திரங்களை நடிகைகள் ஏற்று நடிப்பது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அதிலும் சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைகள் இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அதுவும் எனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக நடிக்கிறார் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனது கதை சினிமாவாகிறது என என் குருவிடம் கூறியபோது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேசமயம் அதில் சுஷ்மிதா சென் நடிக்கிறார் என்று கூறியபோது அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை” என்று கூறியுள்ளார். .