25வது நாளில் அடியெடுத்து வைத்த 'டூரிஸ்ட் பேமிலி' | ஹீரோக்களின் உதவியாளர்கள் கதை கேட்பதை முதலில் நிறுத்த வேண்டும் ; ஆர்கே செல்வமணி காட்டம் | தெலுங்கு படத்தில் சூப்பர் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடிக்கும் உபேந்திரா | எனக்குள் புதிய விடியலை திறந்து விட்ட ஓஷோவின் பேச்சு ; மோகன்லால் | என் விளக்கத்தை அக்ஷய் குமார் படித்தால் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும் ; படத்திலிருந்து விலகிய நடிகர் பதில் | 'அஞ்சலி' படம் பார்த்து அழுத சிலம்பரசன் | பிரபாஸ் அமைதியானவர் அல்ல, கலகலப்பானவர்! -மாளவிகா மோகனன் | உருவ கேலி செய்தவர்களுக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த பதிலடி! | திரைப்படங்களை திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள்! - நடிகர் சூரி வேண்டுகோள் | மந்தமான வசூலில் விஜய் சேதுபதியின் ‛ஏஸ்' |
கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக பாலிவுட்டில் முன்னணி கதாநாயகியாக சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை சுஷ்மிதாசென். இவரது திரையுலக பயணத்தில் பல துணிச்சலான, சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். அந்தவகையில் தற்போது முதன்முறையாக திருநங்கை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் சுஷ்மிதா சென். ‛டாலி' என்கிற பெயரில் பிரபல சமூக ஆர்வலரான திருநங்கை ஸ்ரீகவுரி சாவந்த் என்பவரின் வாழ்க்கையை தழுவி உருவாகும் வெப் தொடர் ஒன்றில் தான் சுஷ்மிதா சென் இந்த அவதாரத்தில் நடிக்கிறார். இந்தத் தொடரை ரவி ஜாதவ் என்பவர் இயக்குகிறார். தற்போது இந்த வெப் தொடரில் திருநங்கையாக நடிக்கும் அவரது புகைப்படம் ஒன்றும் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து இதன் ஓரிஜினல் கதாபாத்திரமான ஸ்ரீகவுரி சாவந்த் கூறும்போது, 'திருநங்கை கதாபாத்திரங்களை நடிகைகள் ஏற்று நடிப்பது என்பது மிகவும் ஆச்சரியமான ஒன்று. அதிலும் சுஷ்மிதா சென் போன்ற முன்னணி நடிகைகள் இப்படி ஒரு சவாலான கதாபாத்திரத்தில் அதுவும் எனது வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் விதமாக நடிக்கிறார் என்பது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தையும் பெருமிதத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனது கதை சினிமாவாகிறது என என் குருவிடம் கூறியபோது அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேசமயம் அதில் சுஷ்மிதா சென் நடிக்கிறார் என்று கூறியபோது அடைந்த ஆச்சரியத்திற்கு அளவே இல்லை” என்று கூறியுள்ளார். .