ப்ளடி பெக்கராக மாறிய கவின் | மகள் திருமணம் : ஆனந்த கண்ணீரில் ஜெயராம் | இது தந்தை பாசம் : யுவனுக்கு ஊட்டிவிடும் இளையராஜா | தேர்தலில் ஓட்டுபோடாதது ஏன்...? - ஜோதிகா விளக்கம் | அம்மாவுக்காக தான் சொன்னேன் - அதிதி | அமிதாப் உடன் ரஜினி : வேட்டையன் போட்டோஸ் வைரல் | குருவாயூர் அம்பல நடையில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரசிகருக்கு ரூ 22,000 மதிப்பிலான ஷூ பரிசளித்த ஜான் ஆபிரகாம் | பாலகிருஷ்ணா பட இயக்குனரை அடித்தால் பத்தாயிரம் தருவேன் ; ராஜமவுலி கலாட்டா | இந்திய டி-20 அணிக்கு தேர்வான கேரள வீரருக்கு பிஜூமேனன் நேரில் வாழ்த்து |
பெங்களூரை சேர்ந்த சுகேஷ் சந்திரசேகர் என்பவர் தொழிலதிபர்களிடமிருந்து 200 கோடி ரூபாய் மோசடி செய்து, பாலிவுட் நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேகி ஆகியோருக்கு கார் மற்றும் விலை உயர்ந்த பரிசினை வழங்கியதாக விசாரணையில் கூறியிருந்தார். அதையடுத்து வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் ஜாக்குலின். அதையடுத்து இந்த மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்கள் தாக்கல் செய்த மனுவில், நடிகை ஜாக்குலின் தனது மொபைலில் இருந்த சாட்சியங்களை அளித்ததோடு விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதோடு அவர் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டார்.
ஆனால் அவரது பெயர் லுக் அவுட் நோட்டீஸில் இருந்ததால் அவரால் செல்ல முடியவில்லை என்று அவர் மீது அமலாக்கத்துறை டில்லி உயர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தது. இதையடுத்து ஜாக்குலின் பெர்னாண்டஸ்க்கு வழங்கப்பட்ட இடைக்கால ஜாமீனை நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து டெல்லி உயர்நீதின்றம் உத்தரவிட்டிருக்கிறது.