டிவி நிகழ்ச்சியில் சவுந்தர்யாவை நினைத்து கண் கலங்கிய ரம்யா கிருஷ்ணன் | மீண்டும் பாலகிருஷ்ணா ஜோடியாக நயன்தாரா நடிப்பது ஏன் | ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனருக்கு பிஎம்டபுள்யூ கார் பரிசு | மாதவன், கங்கனா படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? | என் துயரத்தை சிலர் கொண்டாடினர் : சமந்தா | போலீஸ் வேடத்தில் சசிகுமார் | 64வது படத்தில் நடிக்க சம்பளத்தை உயர்த்தினாரா அஜித்குமார்? | தமிழ் புத்தாண்டில் சூர்யா-சிம்பு மோதிக்கொள்கிறார்களா? | 'மா இண்டி பங்காரம்' படத்திற்காக தீவிர ஒர்க் அவுட்டில் இறங்கிய சமந்தா! | விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! |

கடந்த 2012ல் ஸ்ரீதேவி நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்கள் தங்களிடமுள்ள தனித்துவத்தை இழக்க கூடாது என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாக வெளியான இந்த படத்தை கவுரி ஷிண்டே என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நித்யா மேனன் மற்றும் அஜித் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி தற்போது பத்து வருடங்களை தொட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் கவுரி ஷிண்டே குறித்தும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மனம் திறந்துள்ளார்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படப்பிடிப்பில் அம்மா எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை என்னால் நேரில் பார்க்க முடிந்தது. நானும் இதில் கொஞ்ச நேரமே வந்து போகும் விதமாக நடித்து இருந்தேன். பின்னாளில் அம்மா என்னிடம் கூறும்போது என்றாவது ஒரு நாள் நீ கவுரி ஷிண்டேவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும்.. அது என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். கவுரி ஷிண்டேவும் விரைவில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு கவுரி ஷிண்டே எங்களது குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார்” என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.