கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
கடந்த 2012ல் ஸ்ரீதேவி நடிப்பில் ஹிந்தியில் வெளியான படம் இங்கிலீஷ் விங்கிலீஷ். வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் பெண்கள் தங்களிடமுள்ள தனித்துவத்தை இழக்க கூடாது என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தும் விதமாக வெளியான இந்த படத்தை கவுரி ஷிண்டே என்பவர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நித்யா மேனன் மற்றும் அஜித் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி தற்போது பத்து வருடங்களை தொட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படம் குறித்தும் கவுரி ஷிண்டே குறித்தும் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மனம் திறந்துள்ளார்.
இங்கிலீஷ் விங்கிலீஷ் திரைப்படத்தை என்னால் மறக்க முடியாது. இந்த படப்பிடிப்பில் அம்மா எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தார் என்பதை என்னால் நேரில் பார்க்க முடிந்தது. நானும் இதில் கொஞ்ச நேரமே வந்து போகும் விதமாக நடித்து இருந்தேன். பின்னாளில் அம்மா என்னிடம் கூறும்போது என்றாவது ஒரு நாள் நீ கவுரி ஷிண்டேவின் டைரக்ஷனில் நடிக்க வேண்டும்.. அது என்னுடைய ஆசை என்று கூறியிருந்தார். கவுரி ஷிண்டேவும் விரைவில் நாம் இணைந்து பணியாற்றுவோம் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு கவுரி ஷிண்டே எங்களது குடும்பத்தில் ஒருவராகவே இருக்கிறார்” என்று கூறியுள்ளார் ஜான்வி கபூர்.