நாங்கள் பிரிகிறோம் : ஜிவி பிரகாஷ் - சைந்தவி அறிவிப்பு | ஸ்டார் படத்தின் முதல்வார வசூல் நிலவரம் இதோ | பத்து நாளில் 55 கோடி வசூலித்த அரண்மனை 4 | திரிஷாவின் ஐடென்டிட்டி படப்பிடிப்பு நிறைவு | நடிகர் சங்கத்திற்கு தனுஷ் ரூ.1 கோடி நிதி | மே 17 ரிலீஸ் : இந்த வாரமும் மக்கள் தியேட்டர்களுக்கு வருவார்களா? | நான் எந்தக் கட்சியும் சாராதவன் - அல்லு அர்ஜுன் விளக்கம் | மீண்டும் தமிழுக்கு வரும் திகங்கனா சூரியவன்ஷி | சினிமாவில் தொடர்ந்து நடிக்காதது ஏன் : மோகன் விளக்கம் | தமிழில் வெளியாகும் 'டபுள் ஐ-ஸ்மார்ட்' |
சமீபகாலமாக பாலிவுட் நடிகர் அக்ஷய்குமாரின் படங்கள் படுதோல்வியை சந்தித்து வருகின்றன. பச்சன் பாண்டே, சாம்ராட் பிருத்விராஜ், பெல்பாட்டம், ரக்ஷா பந்தன் உள்ளிட்ட படங்கள் தோல்வி அடைந்தது. இந்த நிலையில் தற்போது அவர் நடித்துள்ள கட்புட்லி படம் வெளிவர இருக்கிறது. இது தமிழில் வெளியான ராட்சசன் படத்தின் ஹிந்தி ரீமேக்.
இந்த நிலையில் படத்தின் புரமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அக்ஷய் குமாரிடம் தொடர் தோல்விகள் குறித்து நிருபர்கள் கேட்டபோது, அதற்கு அவர் அளித்த உருக்கமான பதில் வருமாறு: எனது படங்களின் தோல்வியை நான் உற்று கவனிக்கிறேன். அதற்கான காரணத்தை ஆராய்கிறேன். இப்போது மக்கள் என்ன நினைக்கிறார்கள், என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்கிறேன். என் படங்கள் போதிய வரவேற்பை பெறாததற்கு நாங்கள் தான் காரணம், குறிப்பாக நான் தான் காரணம். நான் உடனே சில மாற்றங்களை செய்ய வேண்டும், பார்வையாளர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியான தோல்விகளுக்கு என்னைத் தவிர வேறு யாரை பொறுப்பாக்க நான் விரும்பவில்லை.
இவ்வாறு அக்ஷய் குமார் கூறியிருக்கிறார்.