போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
திருமணத்திற்கு பின், இளம் வயது அம்மாவாக, சண்டை மற்றும் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி போன்ற படங்களில் நடித்த நதியாவுக்கு, தொடர்ந்து நடிக்கும் ஆர்வம் மேலோங்கியுள்ளது. அதனால், 'சமுதாயத்தில், 40 வயது பெண்களுக்கு எவ்வளவோ பிரச்னைகள் உள்ளன; அம்மாதிரி பிரச்னைகளை மையமாக வைத்து படமெடுத்து, என்னை போன்ற முன்னாள் கதாநாயகிகளுக்கு வாய்ப்பு கொடுங்கள்...' என்று, தன் அபிமான இயக்குனர்களிடம் கேட்டு வருகிறார். அத்துடன், இந்திப் படங்களில் நடிப்பதில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்த நதியா, இந்தியில், நடுத்தர வயது நடிகைகளுக்கு நடிக்க, போதுமான வாய்ப்பு கிடைத்து வருவதால், தற்போது, சில இயக்குனர்களை அணுகி, வாய்ப்பு கேட்டு வருகிறார். காலம் போன காலத்தில் காய்ந்ததாம் பேய் சுரைக்காய்!
— எலீசா