அன்புக்காக ஏங்கும் உள்ளங்களின் உணர்வுகளை கதைக்களமாக கொண்டு உருவாகி வரும் புதிய படம் `பொற்கொடி 10-ம் வகுப்பு. தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் சக்ஸஸ் பார்முலாபடி கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் பிரவீன் நாகயனாக அறிமுகம் ஆகிறார். அவருக்கு ஜோடியாக பிருந்தா என்ற அறிமுக நாயகி நடிக்கிறார். இவர்களுடன் பாலாசிங், ராஜஸ்ரீ, ஜெயசூரியகாந்த், புதுமுகம் அங்கமுத்து ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஸ்ரீ முருகன் ஒளிப்பதிவு செய்ய, ஓவியன் இசையமைக்க, முத்து விஜயன், யுகபாரதி ஆகிய இருவரும் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பழ.சுரேஷ். படப்பிடிப்பு சென்னை, கொடைக்கானல், ஆந்திர எல்லையான கனகம்மா சத்திரம், காவேரிராசபுரம், ஸ்ரீஹரிபுரம், சின்ன ஜம்பாட ஆகிய இடங்களில் நடைபெறுகிறது.