ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பிரபல சின்னத்திரை இயக்குநரான பிரவீன் பென்னட், ‛பாரதி கண்ணம்மா, ராஜா ராணி' உள்ளிட்ட பல ஹிட் சீரியல்களை இயக்கியுள்ளார். இவர் பிரபல திரைப்பட நடிகர் சூரியை சந்தித்து குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரும் இணைந்து எதாவது ப்ராஜெக்ட்டில் கமிட்டாகியிருக்கிறார்களா? என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
உண்மையில், சூரி தனது சொந்த ஊரான ராஜாகூர் ஊர் திருவிழாவை தானே முன்னெடுத்து அண்மையில் நடத்தினார். அந்த திருவிழாவில் திரைபிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என பலரும் கலந்து கொண்டனர். அவர்களை வரவேற்ற சூரி, அவர்களுடன் போட்டோ மற்றும் வீடியோ எடுத்துள்ளார். அப்போது பிரவீன் பென்னட் குடும்பத்துடன் சூரி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகின்றன.




