சாய் அபயங்கர், கயாடு லோகர் புதிய ஜோடி | சிவகார்த்திகேயனின் ‛சேயோன்' பட தலைப்புக்கு சிக்கல் | போலீஸ் அதிகாரியாக சசிகுமார் | இரண்டாவது திருமணம் குறித்த சலசலப்புக்கு மீனா பதில் | ஹாக்டெய்ல் 2வில் லெஸ்பியன் வேடத்தில் நடிக்கும் ராஷ்மிகா | அனில் ரவிபுடி இயக்கத்தில் கார்த்தி, பஹத் பாசில் நடிக்கிறார்களா? | அரசன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியது | சிறந்த நாள் : திருப்பதியில் சாமி தரிசனம் செய்த திரிஷா நெகிழ்ச்சி | ஜிவி பிரகாஷ் படங்களில் அறிமுகமான மமிதா பைஜு, அனஸ்வரா ராஜன் | ரத்தம் தெறிக்கும் வன்முறை படமாக ‛டாக்சிக்' : டீசர் வெளியானது |

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ராக்ஸ்டார். இசைத்துறையில் ஏற்கனவே சாதித்த சாதனையாளர்கள் போட்டியிடும் நிகழ்ச்சி. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு சத்யன், மகாலிங்கம், பிரியா ஹேமேஷ், ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், முதன் முறையாக நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர் தவிர பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெற்று இருந்தனர். இதன் இறுதிசுற்று போட்டி சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நாளை (ஞாயிறு 26 செப்டம்பர்) அன்று மாலை 6.30 மணிக்கு மூன்று மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாக இருக்கிறது.




