மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரமாண்ட இசை நிகழ்ச்சி ராக்ஸ்டார். இசைத்துறையில் ஏற்கனவே சாதித்த சாதனையாளர்கள் போட்டியிடும் நிகழ்ச்சி. பல்வேறு சுற்றுகளாக நடந்த இந்த போட்டியின் இறுதி சுற்றுக்கு சத்யன், மகாலிங்கம், பிரியா ஹேமேஷ், ராகுல் நம்பியார் மற்றும் ரஞ்சித் ஆகியோர் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்கள்.
இந்நிகழ்ச்சியில் பிரபல இசை அமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத், முதன் முறையாக நடுவர் குழுவில் இடம் பெற்றிருந்தார். அவர் தவிர பாடகர்கள் மனோ மற்றும் ஸ்ரீநிவாஸ் ஆகியோருடன் இடம் பெற்று இருந்தனர். இதன் இறுதிசுற்று போட்டி சமீபத்தில் பதிவு செய்யப்பட்டது. கமல்ஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி நாளை (ஞாயிறு 26 செப்டம்பர்) அன்று மாலை 6.30 மணிக்கு மூன்று மணி நேர சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிப்பரப்பாக இருக்கிறது.