ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

கண்ணான கண்ணே தொடரில் அப்பாவின் பாசத்திற்காக ஏங்கும் மகளின் கதையாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. டிஆர்பியிலும் ரோஜா தொடருக்கு அடுத்தப்படியாக இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் நாயகி மீரா கதாபாத்திரத்தில் நிமிஷிகாவும் தந்தையாக நெகடிவ் ஷேட் கதாபாத்திரத்தில் பப்லுவும் நடித்து வருகின்றனர்.
சீரியலில் சீரியஸாக இருக்கும் பப்லு ஆஃப் ஸ்கிரீனில் ஸ்போர்டிவாக பல சேட்டைகளை செய்து செட்டை கலகலப்பாக வைத்திருப்பாராம். அந்த வகையில் நிமிஷா, பப்லு உள்ளிட்டோர் கண்ணான கண்ணே சீரியலின் படப்பிடிப்பு தளத்தில் நின்று கொண்டிருக்க, பப்லு தரையில் ஊர்ந்து சென்று நிமிஷிகாவின் காலை சீண்டுகிறார், இதனால் பயத்தில் நிமிஷிகா துள்ளிக்குதித்து அலறுகிறார். இந்த வீடியோவை பப்லு தனது இண்ஸ்டாகிராமில் ஷேர் செய்ய அது தற்போது வைரலாக பரவி வருகிறது.




