வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ | பிளாஷ்பேக்: திடீர் இயக்குனராகி, காணாமல் போன வில்லன் | மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் |

பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களில் ஒருவராக வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது. போட்டியாளர்களின் உத்தேச பட்டியலும் நாளுக்கு நாள் மாற்றங்களுடன் உலா வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் ப்யூட்டி சலூன் நடத்தி வரும் தொழிலதிபரான ரேணுகா பிரவீன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ரேணுகா பிரவீன் சென்னையில் ப்யூட்டி சலூன் வைத்து நடத்தி வருகிறார். திரை பிரபலங்கள் குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் அவரின் ரெகுலர் கஷ்டமராக உள்ளனர். பிக்பாஸின் அனைத்து சீசன்களிலும் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனுக்கு ரேணுகா பிரவீன் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




