பிரச்னைகளால் பல விஷயங்களை கற்றுக்கொண்டேன்: சமந்தா | குட் பேட் அக்லி : நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன் | விஜய் சேதுபதியிடம் கதை சொன்ன சிவா | பறவையை பச்சை குத்திய பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் | கழுத்துல கருங்காலி மாலை ஏன் : தனுஷ் சொன்ன கலகல தாத்தா கதை | 250 கோடி வசூலைக் கடந்த 'லோகா' | 3 நாளில் 80 கோடி கடந்த 'மிராய்' | 'இட்லி கடை' கதை இதுதான் என சுற்றும் ஒரு கதை | 'இளையராஜா' பயோபிக் : திரைக்கதை எழுத ரஜினிகாந்த் ஆர்வம் |
பிக்பாஸ் சீசன் 5-ல் போட்டியாளர்களில் ஒருவராக வெளிநாட்டை சேர்ந்த தொழிலதிபர் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் வருகிற அக்டோபர் 3 முதல் பிக்பாஸ் சீசன் 5 ஒளிபரப்பாகவுள்ளது. போட்டியாளர்களின் உத்தேச பட்டியலும் நாளுக்கு நாள் மாற்றங்களுடன் உலா வந்து கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி விஜய் டிவி பிரியங்கா, ஷகீலா மகள் மிலா, குக் வித் கோமாளி கனி, நிழல்கள் ரவி, நடிகை ப்ரியா ராமன் ஆகிய திரை பிரபலங்கள் கலந்து கொள்வதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.
இந்நிலையில் ப்யூட்டி சலூன் நடத்தி வரும் தொழிலதிபரான ரேணுகா பிரவீன் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழையப் போவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இங்கிலாந்தை சேர்ந்த ரேணுகா பிரவீன் சென்னையில் ப்யூட்டி சலூன் வைத்து நடத்தி வருகிறார். திரை பிரபலங்கள் குஷ்பு உள்ளிட்ட பல நடிகைகள் அவரின் ரெகுலர் கஷ்டமராக உள்ளனர். பிக்பாஸின் அனைத்து சீசன்களிலும் வெளிநாடு வாழ் தமிழர் ஒருவர் இடம் பெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த சீசனுக்கு ரேணுகா பிரவீன் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.