இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான யாரடி நீ மோகினி, பூவே பூச்சூடவா தொடர்களில் நடித்து பிரபலமானவர் தனலெட்சுமி. இவர் கல்லூரி படிக்கும் காலக்கட்டத்திலேயே சிவா என்பவரை காதலித்து வந்தார். கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் தொடர்ந்த இவரது காதல் கதை சென்ற வருடம் தான் கல்யாணத்தில் முடிந்தது. இவர்களது திருமணம் கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி உற்றார் உறவினர் சூழ கோலாகலமாக நடந்தேறியது.
இந்நிலையில் திருமணமாகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் சமீபத்தில் அவர்களது திருமண நாளை கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடி உள்ளனர். அதன் புகைப்படங்களையும் வீடியோவையும் தனலெட்சுமி தனது இன்ஸ்டாவில் தற்போது ஷேர் செய்துள்ளார். அதில், 'இந்த பத்து வருட காதல் மற்றும் ஒரு வருட திருமண வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் என் மீது நம்பிக்கை வைத்த அன்பானவருக்கு நான் சொல்வது உங்கள் நிபந்தனையற்ற காதலுக்கு மிக்க நன்றி' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். உண்மை காதலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த ஜோடிக்கு பலரும் தற்போது திருமண நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.