ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
சூப்பர் சிங்கர் 8வது சீசனின் வைல்டு கார்டு ரவுண்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்து முடிந்துள்ள நிலையில், மக்கள் மனதில் இடம் பிடித்த இரண்டு போட்டியாளர்கள் பைனலுக்குள் செல்கின்றனர்.
சூப்பர் சிங்கர் 8-வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இறுதிச் சுற்றுக்கு அனு, பரத், முத்து சிற்பி, அபிலாஷ் ஆகியோர் தேர்வாகியுள்ளனர். இதற்கிடையே கடந்த 4 வாரங்களில் எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களான அய்யனார், ஸ்ரீதர் சேனா, மானசி, ஆதித்யா ஆகியோர்களுக்கு பைனலுக்குள் நுழைய இரண்டாம் வாய்ப்பாக வைல்டு கார்டு ரவுண்ட் நடத்தப்பட்டது. இவர்களில் ஒருவரை மக்களும், இன்னொருவரை நடுவர்களும் தேர்ந்தெடுப்பார்கள். அந்த வகையில் மக்களின் அதிகமான வாக்குகளை பெற்று ஸ்ரீதர் சேனாவும், நடுவர்கள் தேர்வாக மானசியும் தேர்வாகி பைனலுக்குள் செல்கின்றனர். திறமையானவர்களின் மொத்த குவியலாக நடக்கவிருக்கும் இறுதிச்சுற்று போட்டியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.