பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் டிவியின் ஈரமான ரோஜாவே தொடரில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷியாம். சினிமா மீது தீராத காதல் கொண்ட இவர் நடிக்க வேண்டும் என்ற கனவோடு கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு வந்தார். பல இடங்களில் வாய்ப்புக் கேட்டு அலைந்த ஷியாமுக்கு மிஞ்சியதெல்லாம் ஏமாற்றம் தான். இதற்கிடையில் அவர் பார்ப்பதற்கு ஹிந்தி நடிகர் போல் இருப்பதால் பாலிவுட்டில் முயற்சி செய்ய சொல்லி நண்பர்கள் அறிவுறுத்த, மும்பைக்கும் சென்றார் ஷியாம். ஆனால் அங்கும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதன்பின் மீண்டும் சென்னை திரும்பிய ஷியாமுக்கு சின்னத்திரையில் புதுக்கவிதை என்கிற விஜய் டிவி சீரியலில் வாய்ப்பு கிடைத்தது. வந்த வாய்ப்பை கெட்டியாக பிடித்துக்கொண்ட அவர் தொடர்ந்து விஜய் டிவியில் களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, மெல்ல திறந்தது கதவு, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, கண்ணம்மா, அரண்மனை கிளி, என பல சீரியல்களில் நடித்து வந்தார்.
டான்ஸ் மற்றும் ரியாலிட்டி ஷோக்களையும் விட்டு வைக்காத ஷ்யாம் தனக்கு கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் பயன்படுத்தி தனக்கான இடத்தை உருவாக்கினார். இப்படியான ஒரு காலக்கட்டத்தில் தான் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனை ஒரு காபி ஷாப்பில் சந்திக்கும் வாய்ப்பு ஷியாமுக்கு கிடைத்தது. அவரை சந்தித்து பேசி தனது சினிமா குறித்த காதலையும் தனது சின்னத்திரை பயணத்தையும் கூறியுள்ளார்.
அதைக் கேட்டு கவுதம் மேனன் 'அச்சம் என்பது மடமையடா' என்ற படத்தில் ஷியாமுக்கு வாய்ப்பளித்தார். தமிழில் சிம்புவுக்கும் தெலுங்கு வெர்ஷனில் நாக சைதன்யாவுக்கும் ஷ்யாம் நண்பராக நடித்திருந்தார். தனது வெள்ளித்திரை கனவை தீராத ஓட்டத்தால் எட்டிப்பிடித்த ஷியாம் அடுத்த நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். திரையுலகில் சாதித்தது போலவே நிஜ வாழ்விலும் தனது நீண்ட நாள் காதலியை போராடி கைப்பிடித்து ஜெயித்துக் காட்டியுள்ளார். விரைவில் அவர் வெள்ளித்திரையில் அடுத்த படத்தில் கமிட்டாக அவரது ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.