ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

யாரடி நீ மோகினி சீரியலின் 2-வது க்ளைமாக்ஸை வரும் ஞாயிறு அன்று ஒளிபரப்பபோவதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி புரோமோ வெளியிட்டுள்ளது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஹிட் அடித்த யாரடி நீ மோகினி சீரியல் சமீபத்தில் நிறைவுற்றது. மிகவும் வித்தியாசமான முயற்சியாக தொடரின் க்ளைமாக்ஸை ரசிகரக்ளிடம் ஒப்படைத்திருந்த சீரியல் குழு சென்ற வார ஞாயிறு அன்று க்ளைமாக்ஸை ஒளிபரப்பியது. சீரியல் முடிவடைந்ததையொட்டி அதில் நடித்த நடிகர்களும் மிகவும் எமோஷ்னலான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களுடன் உரையாடி வந்தனர்.
இந்நிலையில், யாரடி நீ மோகினி சீரியலுக்கு மற்றொரு க்ளைமாக்ஸ் வைத்திருப்பதாக சீரியல் குழு அறிவித்து புரோமோ வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் தொலைக்காட்சி தொடர் வரலாற்றில் ஒரே சீரியலுக்கு இரண்டு க்ளைமாக்ஸ் வைத்திருப்பது இதுவே முதல் முறை என ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
யாரடி நீ மோகினி சீரியலின் இரண்டாவது க்ளைமாக்ஸ் வரும் ஞாயிறு அன்று மதியம் 1:30 மணி முதல் 2:30 மணி வரை ஒளிபரப்பாகவுள்ளது.




