ஜப்பானில் வெளியாகும் புஷ்பா 2 | தனுஷ் 54வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த சுராஜ் வெஞ்சாரமூடு | டாக்சிக் படத்தில் இரண்டு இசையமைப்பாளர்கள் | தொடர் சிக்கலில் சிங்கிள் தியேட்டர்கள் : விடிவுகாலம் பிறக்குமா? | 23வது சென்னை திரைப்பட விழாவில் தமிழ் 12 படங்கள் | ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா |

அனிதா சம்பத் தனது இரண்டாவது திருமண நாளில் தனது கணவர் குறித்து உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதை பார்க்கும் ரசிகர்கள் இப்படி ஒரு காதலா என இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வளர்ந்து வரும் நடிகையாக உருவெடுத்துள்ளார் அனிதா சம்பத். பிக்பாஸ் வீட்டில் இருந்தபோதும் சரி, அதற்கு பின்னும் சரி நெட்டிசன்கள் அனிதாவை விடாமல் ட்ரோல் செய்து வருகின்றனர். ஆனால், அதை எல்லாம் புறந்தள்ளி அனிதாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக நின்று வருகிறார் அவரது கணவர் பிரபா.
இந்நிலையில் சமீபத்தில் அவர்களது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ள அனிதா சம்பத் தனது கணவரை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் வளர்ச்சியோடு முழு காரணமாக இருந்து ஓரமா நின்னு கை தட்டி ரசிக்கிற உனக்கு திருப்பி கொடுக்க காதல் தவிர எதுவும் இல்லை. நம் காதல் போல் நாமும் வளர்வோம்!. இரண்டாம் வருட திருமண நாள் வாழ்த்துக்கள். காதலிக்க தொடங்கி 61வது மாசம் ஆச்சு. சீக்கிரமா ஐ லவ் யூ சொல்லி தொலை.. ஐந்து வருஷமா வெயிட் பண்றேன்”. என குறிப்பிட்டுள்ளார்.
இந்த இளம் ஜோடிகளுக்கு இடையே இப்படி ஒரு காதலா என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.