விமர்சனம் என்ற பெயரில் சினிமாவை கொலை செய்யும் யூடியூபர்கள்: சுசீந்திரன் காட்டம் | இரண்டேகால் படம் : விமல் சொன்ன புதுக்கணக்கு | அனிமல் படம் குறித்த விமர்சனத்திற்கு ராஷ்மிகா கொடுத்த பதிலடி | கே.பி.ஒய் பாலாவின் ‛காந்தி கண்ணாடி' டைட்டில் முன்னோட்ட வீடியோ வெளியீடு | அவதூறு பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை : நடிகர் சங்கம் எச்சரிக்கை | தேரே இஸ்க் மெயின் படப்பிடிப்பு நிறைவு | இயக்குனராக 18 ஆண்டுகளுக்கு பின் தெலுங்கு சினிமாவிற்கு திரும்பும் பிரபுதேவா | மீண்டும் சிவகார்த்திகேயன் படத்துடன் மோதும் துல்கர் சல்மான் படம் | இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' |
சினிமாவிலும், சீரியலிலும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் செந்தில் குமாரியின் எழில் கொஞ்சும் புகைப்படங்கள் நெட்டீசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
பசங்க திரைப்படத்தில் அன்பு கதாபாத்திரத்திற்கு அம்மாவாக நடித்தவர் நடிகை செந்தில் குமாரி. இவர் தனது குரலாலும், பேசும் ஸ்லாங்கிலும் தனக்கான தனி இடத்தை பிடித்தார். சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் இவர், தற்போதுவானத்தை போல தொடரில் மீண்டும் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சீரியல் நடிகர், நடிகைகள் தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருப்பதை போலவே செந்தில்குமாரியும் தனக்கான இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். செந்தில்குமாரி பதிவிடும் புகைப்படங்களில் அவர் வயதான நபர் போல் அல்லாமல், இளமையாக பார்ப்பவர் ரசிக்கும் படியான தோற்றத்தில் அழகாக ஜொலிக்கிறார். சினிமாக்களிலும், சீரியலிலும் அம்மாவாகவே பார்த்து பழகிய செந்தில்குமாரி இப்படி இளம் நடிகைகளுக்கே டப் கொடுக்கும் அழகோடு இருப்பதை பார்த்த நெட்டீசன்கள் இவரா அம்மா! என ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர்.