உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செந்தூரப்பூவே சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தர்ஷா குப்தா நடித்து வருகிறார். தர்ஷா குப்தாவின் ஆக்டிங் கேரியருக்கு நல்லதொரு தொடக்கத்தை இந்த கதாபாத்திரம் கொடுத்ததுடன் அதிக அளவு ரசிகர்களை பெற்று கொடுத்தது. இன்ஸ்டாகிராமில் ஹாட்டாக போட்டோ போடும் இவருக்கு வாலிப ரசிகர்கள் ஜாஸ்தி. பெரிய நடிகைகளுக்கு இணையாக தர்ஷா குப்தாவை 15 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின் தொடர்கிறார்கள்.
இந்த புகழ் வெளிச்சத்தால் திரைப்பட வாய்ப்புகளை கைப்பற்றிய அவருக்கு, "ருத்ர தாண்டவம்" மற்றும் சன்னி லியோனுடன் மற்றொரு படம் என இரண்டு படங்கள் கைவசம் உள்ளது. இதில் "ருத்ர தாண்டவம்" படத்தில் தர்ஷா கதாநாயகியாக நடிக்கிறார்.
இந்நிலையில், தனக்கு வெளிச்சம் கொடுத்த செந்தூரப்பூவே சீரியலில் இருந்து தர்ஷா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேசமயம் தர்ஷா தனது இன்ஸ்டாகிராமில், "எதிரிகள் இல்லையென்றால் நீ இன்னும் இலக்கை நோக்கி பயணிக்கவில்லை என்று அர்த்தம்" என்ற வாசகத்துடன் பதிவிட்டுள்ளார். சினிமாவில் பிஸியாகிவிட்டதால் சீரியலை விட்டு விலகினாரா? அல்லது வேறு எதாவது காரணமா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.