நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
சின்னத்திரை நடிகையான சமீரா ஷெரீப் தனக்கு வருகின்ற நெகட்டிவான கமெண்டுகளுக்கான இண்ஸ்டாகிராமில் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு தொடர் மற்றும் ஜி தமிழின் றெக்கைகட்டி பறக்குது மனசு தொடர்களில் நடித்து பிரபலமானவர் சமீரா ஷெரீப். இவர் பகல் நிலவு சீரியலில் தன்னுடன் நடித்த சையத் அன்வர் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவுள்ளது. இதனை தொடர்ந்து தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். அதற்கு நெகட்டிவான கமெண்டுகளை கொடுத்து வந்த நெட்டிசன்களை, சமீரா பல முறை வார்னிங் செய்துள்ளார்.
இந்நிலையில், தற்போது அவர் கர்ப்பமான வயிறுடன் புகைப்படம் போடுவதை சிலர் குறை கூறியுள்ளார். அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ள சமீரா, "இது என்னோட பேபி... என்னோட பம்ப் ... இஷ்டம் இருந்தால் பாருங்கள் இல்லை என்றால் கண்களை மூடிக் கொள்ளுங்கள்." என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.