எப்போ கல்யாணம் பண்ணுவீங்க? அமீர் - பாவ்னிக்கு ரசிகர்கள் கேள்வி | 'டிராகான் Vs நி.எ.மே.எ.கோபம்' - இளைஞர்களைக் கவரப் போவது யார்? | ஒரு மணி நேரத்திலேயே பொய் பேசிய கயாடு லோஹர் | கன்னடர்களின் கோபத்திற்கு ஆளான ராஷ்மிகா மந்தனா | ஒன்பது படங்களில் ஒன்றாவது வசூலைக் குவிக்குமா ? | இசையமைப்பாளர் தமனுக்கு கார் பரிசளித்த பாலகிருஷ்ணா | பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி |
பிரபல தொலைக்காட்சி நடிகையான பரீனா தனது கர்ப்பகால புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
விஜய் டிவி சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர் பரீனா. இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். இதனை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் இவர் கருப்பு உடையில் கர்ப்பமான வயிற்றில் மருதாணியிட்டு வெளியிட்ட புகைப்படம் வைரலாகி, இணையத்தில் பேசு பொருளாகவும் மாறியது.
இந்நிலையில் பரீனா தற்போது நீச்சல் குளத்தில் நீரில் மூழ்கியவாறு புதிய போட்டோஷூட் செய்துள்ளார். கர்ப்பமான வயிற்றுடன் இவ்வளவு ரிஸ்க்கான போட்டோஷூட் தேவையா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ள பரீனா, கர்ப்ப காலம் வாழ்வின் ஓர் அங்கம் தான். நோயல்ல. எனவே கொண்டாடுங்கள் எதையும் ஜாக்கிரதையாக செய்யுங்கள் என பதிவிட்டுள்ளார்.
பரீனாவுக்கு வாழ்த்துகளை தெரிவித்து ரசிகர்கள் அவரது தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.