''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "தமிழும் சரஸ்வதியும்" தொடர், டி.ஆர்.பி ரேட்டிங்கில் நல்ல புள்ளிகளை பெற்று ஹிட் அடித்துள்ளது. தீபக் மற்றும் நக்ஷத்திரா நடிப்பில் "தமிழம் சரஸ்வதியும்" என்ற நெடுந்தொடர் கடந்த ஜுலை 12 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7.30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.
தற்போது, இந்த தொடருக்கு கிடைத்த டி.ஆர்.பி ரேட்டிங் தான் தொலைக்காட்சி வட்டாரத்தில் பேசு பொருளாகியுள்ளது. "தமிழும் சரஸ்வதியும்" தொடரின் முதல் எபிசோட் இதுவரை இல்லாத அளவில் அதிக பார்வையாளர்களை பெற்று டி.ஆர்.பியல் அதிக புள்ளிகளை பெற்றுள்ளது.
ஒரு தொடரின் முதல் எபிசோடுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து தான், அந்த தொடரின் வெற்றி தோல்வி தீர்மாணிக்கப்படுகிறது. அந்த வகையில் "தமிழும் சரஸ்வதியும்" தனக்கான பார்வையாளர்களை முதல் எபிசோடிலேயே கவர்ந்து இழுத்து கொண்டது.
முதல் வாரத்திலேயே டிஆர்பி ஹிட் அடித்திருக்கும் தமிழும் சரஸ்வதியும் தொடருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.