தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் |
சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் நக்ஷத்திரா நாகேஷ். அதன்பிறகு வாணி ராணி தொடரில் நடிக்கத் தொடங்கியர் லட்சுமி ஸ்டோர், ரோஜா, மின்னலே, நாயகி உள்பட பல தொடர்களில் நடித்தார்.
இதற்கிடையில் சேட்டை, வாயை மூடி பேசவும், நம்பியார், இந்திரஜித், மிஸ்டர் லோக்கல் படங்களில் நடித்தார். தற்போது வஞ்சகம், ஹேய் சினாமிகா படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் திருமணம் செய்ய இருக்கும், காதலன் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார். அவர் பெயர் ராகவ் என கூறியிருப்பவர் அவர் பற்றிய மற்ற விபரங்கள் எதையும் வெளியிடவில்லை.
இதுகுறித்து அவர் தனது இன்ஸ்ட்ராகிராமில் எழுதியிருப்பதாவது: நான் இன்ஸ்டாகிராமில் சேரும் போது நான் ஒரு டீன் ஏஜ் பொண்ணு. என்னுடைய நண்பர்களை பின் தொடர்ந்தேன். புது புது நண்பர்களை உருவாக்கினேன். என்னை பற்றிய சில விஷயங்களை என் சிறிய உலகத்துடன் பகிர்ந்து கொண்டேன். நான் நடிகை ஆனதும் ரசிகர்களாகிய நீங்கள் என் சிறிய உலகத்தின் ஒரு அங்கமாகி விட்டீர்கள். ஒவ்வொரு நாளும் நாம் அதிகம் வளர்ந்தோம். நீங்கள் என் மீது காட்டும் அன்பும் அதிகமானது. அதற்காக நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். நம் உலகத்திற்கு ஒரு லேட்டஸ்ட் வரவை நான் உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன். என்று குறிப்பிட்டிருக்கிறார்.