பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் | டிசம்பர் 12ல் அறிவித்த படங்கள் சிக்கலின்றி வெளியாகுமா ? | தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி |

தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நீலிமா ராணி, அதன்பிறகு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக, குமரியாக நடித்தார். சின்னத்திரைக்கு வந்தவர் இங்கும் ஏராளமான சீரியல்களில் நடித்து சீரியல் தயாரிப்பாளராகவும் ஆனார். தலையணை பூக்கள், தாமரை தொடர்களில் நடித்தார். தற்போது அவர் நடித்து வரும் வாணி ராணி சீரியலும் நிறைவடைய இருக்கிறது.
அடுத்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் அன்னக்கிளி சீரியலில் வில்லி அவதாரம் எடுக்க இருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு தனது கணவர் இசையுடன் இணைந்து நிறம் மாறாத பூக்கள் தொடரை தயாரித்தவர் இப்போது விஜய் டி.விக்காக அன்னக்கிளி தொடரை தயாரிக்கிறார்.
தனது முதல் தயாரிப்பான நிறம் மாறாத பூக்களில் நடிக்காத நீலிமா ராணி, அன்னக்கிளியில் வில்லியாக நடிக்க இருக்கிறார். இதுவரை சீரியல்களில் வராத துர்கா என்ற டெரர் வில்லியாக நடிக்க இருக்கிறார். இந்த மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக இருக்கிறது.