நானாக வாய்ப்பு கேட்ட ஒரே இயக்குனர் இவர்தான் ; மிருணாள் தாகூர் | பிளாஷ்பேக் : அக்கா அளவுக்கு சாதிக்க முடியாமல் போன தங்கை | சினிமாவிற்கு வரும் புதிய இரட்டை இசை அமைப்பாளர்கள் | 10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி | கடும் போட்டியில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் | சபரிமலை தங்கம் திருட்டு : அமலாக்கத்துறை முன் ஜெயராம் ஆஜர் | முதல்வரை சந்தித்த ரஜினி மகள் சவுந்தர்யா | ஏப்ரல் 27ல் 'தாய் கிழவி', தடங்கல் இல்லாமல் வெளியாகுமா? | ஏழுமலை 2ம் பாகம் பணியில் அர்ஜூன் | சென்னையில் 3 தெருக்களுக்கு இசைக் கலைஞர்கள் பெயர் |

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் போன்ற பெரிய பட்ஜெட் ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் தருவதைப்போன்று புதிய புதிய நேரடி தமிழ் தொடர்களுக்கும் முக்கியத்தும் தருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது ராஜா ராணி என்ற தொடர்.
புகழ்பெற்ற திரைப்படத்தின் தலைப்புகளை சீரியல்களுக்கு வைப்பது பேஷன் என்பதால் இதற்கு ஆர்யா, நயன்தாரா நடித்த வெற்றிப் படமான ராஜா ராணி தலைப்பு வைத்திருக்கிறார்கள். வருகிற மே மாதம் 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. ஒரு புதிய தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாவது மிகவும் அபூர்வம். அது ராஜா ராணிக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில் வேலைக்காரியாக செல்லும் ஹீரோயினை அந்த வீட்டு செல்லப் பிள்ளையான ஹீரோ காதலிக்கிறார். செல்லப்பிள்ளையின் காதலை மறுக்க முடியாமல் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர், மகனை கொண்டே மருமகளை விரட்ட சதி திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டங்களை ஹீரோயின் சாதுர்யமாக எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள். சீரியலின் கேப்சனும் ஒரு பணிப்பெண் மருமகளான கதை என்றே வைத்திருக்கிறார்கள்.




