ஒரே ஒரு ஹிட்டுக்காக காத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் | தமிழை விட்டு விலகி செல்கிறாரா சூர்யா? | இசை ஆல்பம் இயக்கிய ஷாம் | நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுதலை : மற்ற 6 பேர் குற்றவாளி என தீர்ப்பு | இயற்கை விவசாயம் செய்யும் மேக்னா | பிளாஷ்பேக்: நட்சத்திர ஓட்டல்களில் படமான 'வேலைக்காரன்' | பிளாஷ்பேக்: சரித்திர படத்தில் சோலோ ஹீரோயினாக நடித்த கண்ணாம்பா | 2026 சினிமா நிலைமை இப்படி இருக்க போகிறது : திருப்பூர் சுப்ரமணியம் சொல்லும் அதிர்ச்சி தகவல் | கோவை தமிழ் பிடிக்கும்னு கிர்த்தி ஷெட்டி சொன்னது ஏன்? | ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! |

விஜய் தொலைக்காட்சி பிக் பாஸ் போன்ற பெரிய பட்ஜெட் ரியாலிட்டி ஷோக்களுக்கு முக்கியத்துவம் தருவதைப்போன்று புதிய புதிய நேரடி தமிழ் தொடர்களுக்கும் முக்கியத்தும் தருகிறது. அந்த வரிசையில் அடுத்து வருகிறது ராஜா ராணி என்ற தொடர்.
புகழ்பெற்ற திரைப்படத்தின் தலைப்புகளை சீரியல்களுக்கு வைப்பது பேஷன் என்பதால் இதற்கு ஆர்யா, நயன்தாரா நடித்த வெற்றிப் படமான ராஜா ராணி தலைப்பு வைத்திருக்கிறார்கள். வருகிற மே மாதம் 29ந் தேதி முதல் ஒளிபரப்பு தொடங்குகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 7 மணிக்கு பிரைம் டைமில் ஒளிபரப்பாகிறது. ஒரு புதிய தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாவது மிகவும் அபூர்வம். அது ராஜா ராணிக்கு கிடைத்திருக்கிறது.
ஒரு பெரும் பணக்கார குடும்பத்தில் வேலைக்காரியாக செல்லும் ஹீரோயினை அந்த வீட்டு செல்லப் பிள்ளையான ஹீரோ காதலிக்கிறார். செல்லப்பிள்ளையின் காதலை மறுக்க முடியாமல் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர், மகனை கொண்டே மருமகளை விரட்ட சதி திட்டம் தீட்டுகிறார்கள். அந்த திட்டங்களை ஹீரோயின் சாதுர்யமாக எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள். சீரியலின் கேப்சனும் ஒரு பணிப்பெண் மருமகளான கதை என்றே வைத்திருக்கிறார்கள்.