தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல்: புதிய தலைவராகும் ஜி.கே.எம். தமிழ்குமரன் | மீண்டும் ‛தி ராஜா சாப்' பட நிறுவனத்துடன் இணையும் பிரபாஸ்! | சிகிச்சைக்கு பிறகு அடியோடு மாறி விட்டேன்! -‛பாகுபலி' வில்லன் ராணா | பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கிடம் 10 கோடி கேட்டு மிரட்டல்! | ‛டிராகன்-2' அப்டேட் கொடுத்த பிரதீப் ரங்கநாதன்- அஸ்வத் மாரிமுத்து! | 70வது பிலிம்பேர் விருதுகள் - அதிக விருதுகளை வென்ற 'அமரன்' | இது கமல் ரஜினி பட கணக்கு | சிறிய பட்ஜெட் படத்தை இயக்கும் சமுத்திரக்கனி! | ‛கல்கி 2898 ஏ.டி' படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | பிரதீப் ரங்கநாதன் இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு! |

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'ஆண்டாள் அழகர்' தொடர் தற்போது 'பகல் நிலவு' என்ற பெயரில் அதன் இரண்டாம் பாகமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் இளம் தலைமுறை காதலர்களாக நடிப்பவர்கள் அன்வரும், சமீராவும். சீரியலில் சீரியசாக காதலிக்கும் இவர்கள் இருவரும் நிஜத்திலும் காதலர்களாகி விட்டார்கள்.
தெலுங்கு சீரியலில் பிசியாக நடித்துக் கொண்டிருந்த சமீரா 'பகல் நிலவு' மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார், அன்வர் தமிழில் ஏராளமான சீரியலில் நடித்தவர். “நான் நடிகர் என்றாலும் சமீராவின் நடிப்புக்கு நான் ரசிகன். ஒரு ஷாப்பிங் மாலில்தான் முதல் முதலில் சந்தித்தோம். பிறகு நண்பர்களானோம் பின்பு அதுவே காதலானது என்கிறார் அன்வர். நிஜ காதலர்களே சீரியல் காதலர்களாக இருப்பதால் காதல் காட்சிகளில் தனி கவனம் செலுத்துகிறது சீரியல் கதை இலாக்கா.