எனக்கு தடை விதிப்பவர்களிடம் ஏன் என்று கேளுங்கள்: ராஷ்மிகா | அரிய நோயால் பாதிக்கப்பட்டுள்ள பூமி பட்னேகர் | பிளாஷ்பேக் : அமிதாப்பச்சன் பட ரீமேக்கில் ஆர்வம் காட்டிய ரஜினி | பழம்பெரும் பாடகி, நடிகை பாலசரஸ்வதி தேவி காலமானார் | நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் |
பழம்பெரும் நடிகர் ஓ.ஏ.கே தேவரின் மகன் ஓ.ஏ.கே.சுந்தர். தந்தையை போலவே சினிமாவில் அறிமுமாகி குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். விருமாண்டி, குசேலன், பேராண்மை, வேல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தார்.
திடீரென சின்னத்திரைக்கு வந்தார். மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடிக்க ஆரம்பித்தார். நீண்ட நெடிய தொடரான அதில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. தற்போது மகாபாரதம் தொடரில் இவரது போர்ஷன் முடிந்து விட்டதால் சின்னத்திரைக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
தற்போது புத்தன் ஏசு காந்தி, ஜே உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். "வில்லன், குணசித்திரம், காமெடி என விதவிதமான கேரக்டர்களில் நடித்து சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் இனி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன்" என்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர்.