மார்ஷல் படத்தில் வில்லன் யார்... | கருப்பு படத்தில் நடிக்க மறுத்த சிம்பு.? | ராஷ்மிகா மந்தனா நடிக்கும் ‛தமா': தீபாவளிக்கு ரிலீசாகிறது | ஒரே மாதத்தில் கோட்டா சீனிவாசராவின் மனைவியும் மறைந்தார்! | சிக்கந்தர் தோல்வி: சல்மான்கான் மீது நேரடியாக குற்றம் சாட்டிய ஏ.ஆர்.முருகதாஸ்! | நெகட்டிவ் விமர்சனங்களால் ‛கூலி' வசூல் பாதிப்பா? திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | ஆபரேஷன் சிந்தூரில் வீர மரணம் அடைந்த முரளி நாயக் வாழ்க்கை சினிமாவாகிறது | அதிக வசூல் இயக்குனர்களில் முதலிடத்தில் லோகேஷ் கனகராஜ் | ஹீரோயின் ஆகும் ஆசை இல்லை: 'கூலி' மோனிகா பிளெஸ்சி | 'கேப்டன் பிரபாகரன்' படத்திற்காக வீரப்பனை சந்தித்தேன்: ஆர்.கே.செல்வமணி |

பழம்பெரும் நடிகர் ஓ.ஏ.கே தேவரின் மகன் ஓ.ஏ.கே.சுந்தர். தந்தையை போலவே சினிமாவில் அறிமுமாகி குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். விருமாண்டி, குசேலன், பேராண்மை, வேல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தார்.
திடீரென சின்னத்திரைக்கு வந்தார். மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடிக்க ஆரம்பித்தார். நீண்ட நெடிய தொடரான அதில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. தற்போது மகாபாரதம் தொடரில் இவரது போர்ஷன் முடிந்து விட்டதால் சின்னத்திரைக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
தற்போது புத்தன் ஏசு காந்தி, ஜே உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். "வில்லன், குணசித்திரம், காமெடி என விதவிதமான கேரக்டர்களில் நடித்து சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் இனி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன்" என்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர்.




