அகண்டா 2 தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பு… | ஒரு சாராருக்கு பிடித்த படங்களே வருகின்றன : இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் | லாக் டவுனை புறக்கணிக்கிறாரா அனுபமா பரமேஸ்வரன்? | மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' |

பழம்பெரும் நடிகர் ஓ.ஏ.கே தேவரின் மகன் ஓ.ஏ.கே.சுந்தர். தந்தையை போலவே சினிமாவில் அறிமுமாகி குணசித்திர வேடங்களில் நடித்து வந்தார். விருமாண்டி, குசேலன், பேராண்மை, வேல் உள்பட பல படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தார்.
திடீரென சின்னத்திரைக்கு வந்தார். மகாபாரதம் தொடரில் பீஷ்மராக நடிக்க ஆரம்பித்தார். நீண்ட நெடிய தொடரான அதில் நடிக்க ஆரம்பித்த பிறகு அவரால் சினிமாவில் நடிக்க முடியவில்லை. தற்போது மகாபாரதம் தொடரில் இவரது போர்ஷன் முடிந்து விட்டதால் சின்னத்திரைக்கு குட்பை சொல்லிவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவெடுத்திருக்கிறார்.
தற்போது புத்தன் ஏசு காந்தி, ஜே உள்பட பல படங்களில் நடித்து வருகிறார். "வில்லன், குணசித்திரம், காமெடி என விதவிதமான கேரக்டர்களில் நடித்து சினிமாவில் நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதே என் விருப்பம் இனி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்த இருக்கிறேன்" என்கிறார் ஓ.ஏ.கே.சுந்தர்.




