ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
கலைஞர் தொலைக்காட்சியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் காமெடி தொடர் மடிப்பாக்கம் மாதவன். எஸ்.மோகன் இயக்கி வரும் இந்த தொடரில் வெள்ளரிக்காய் புகழ் ராம்ஜி, மதுமிதா, நளினி உள்பட பலர் நடித்து வருகின்றனர். சுமார் 450 எபிசோடுகளை கடந்து விட்ட இந்த தொடரில் மாதம் ஒரு கதை இடம்பெற்று வருகிறது. இந்த தொடருக்கு நேயர்கள் மத்தியில் வரவேற்பு இருந்துபோதிலும், இந்த மாதத்தோடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட உள்ளதாம். அதனால் படப்பிடிப்பு நடத்துவதை நிறுத்தி விட்டனர். ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ள எபிசோடுகள் மட்டுமே அடுத்தடுத்து ஒளிபரப்பாக இருக்கிறது.
எதற்காக தொடர் நிறுத்தி வைக்கப்படுகிறது? என்று அந்த தொடரில் நடித்து வருபவர்களிடம் கேட்டபோது, மடிப்பாக்கம் மாதவன் தொடர் பிரைம் டைமில் ஒளிபரப்பாவதால் நிறைய நேயர்கள் பார்க்கிறார்கள். ஆனபோதும், தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக்கொண்டிருப்பதால், திமுக பிரச்சாரம் சம்பந்தப்பட்ட செய்திகள் இனி கலைஞர் தொலைக்காட்சியில் அதிகமாக இடம்பெறப்போகிறது. குறிப்பாக, மு.க.ஸ்டாலின் மக்களை சந்தித்து நேரடி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருவதால், இனிமேல் அவர் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகள் அதிகமாக ஒளிபரப்பப்பட உள்ளது. மடிப்பாக்கம் மாதவன் தொடர் வெளியாகும் இரவு 9.30 மணி என்பது அனைவரும் டிவி பார்க்கும் நேரம் என்பதால், அந்தநேரத்தில் ஸ்டாலின் சம்பந்தப்பட்ட அரசியல் செய்திகளை கூடுதலாக ஒளிபரப்பு திட்டமிட்டுள்ளார்கள். அதனால், தேர்தல் முடிகிற வரைக்கும் இனிமேல் மடிப்பாக்கம் மாதவன் தொடர் ஒளிபரப்பாகாது. தேர்தலுக்கு பிறகு மீண்டும் தொடரும் என்கிறார்கள்.