நடிகை ராதிகாவுக்கு டெங்கு : மருத்துவமனையில் அனுமதி | மோசடி வழக்கு : காமெடி நடிகர் சீனிவாசன் கைது | பிரபாஸ் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் | சோசியல் மீடியாவில் 7 ஆண்டுகளாக அவதூறு பரப்பிய பெண்ணை அடையாளப்படுத்திய பிரித்விராஜ் மனைவி | அசினுடன் நடந்த டெஸ்ட் ஷூட் : பஹத் பாசிலுக்கு கைமாறிய பிரித்விராஜ் படம் | நடிகர் சங்கத்திற்கு பெண் தலைமை : மோகன்லால் ஆலோசனைப்படி வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நடிகர் | ஜான்வி கபூரின் ‛பரம் சுந்தரி' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தனுஷ் நடிக்கும் 54வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது | கதை சர்ச்சையில் சிக்கிய ஸ்ரீலீலாவின் ஆஷிகி 3 | மாதம்பட்டி ரங்கராஜ் உடனான திருமணம் : கணவன், மனைவியாக பயணத்தை துவங்கியதாக ஜாய் கிரிஸ்டலா பதிவு |
ஜெயா டிவியில் நீண்டகாலமாக செய்தி வாசிப்பாளராக இருந்து வருபவர் பாத்திமா பாபு. அதோடு, சீரியல், சினிமா என இரண்டு துறையிலும் கேரக்டர் ரோல்களில் நடித்திருப்பவர். சமீபத்தில் நடிகர் சரத்குமார் அணியினர் ரஜினியை சந்தித்து நடிகர் சங்க தேர்தலின்போது தங்கள் அணிக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டு சென்றபோது பாத்திமா பாபுவும் உடன் சென்றார். இந்நிலையில், அதிமுகவை சேர்ந்தவர்கள் நடிகர் சங்க தேர்தலில் அவரவர் விருப்பப்படி வாக்களிக்கலாம். ஆனால் எந்த அணியிலும் சேர்ந்து கொண்டு ஓட்டு வேட்டை நடத்தக்கூடாது என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்ததை அடுத்து, பாத்திமா பாபு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது. குறிப்பாக, ஜெயா டிவியை விட்டே அவரை நீக்கி விட்டதாக கடந்த சில தினங்களாக சினிமா வட்டாரங்களில் பரவலாக பரபரப்பு செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது.
ஆனால் இதுபற்றி பாத்திமா பாபுவைக் கேட்டால், ஜெயா டிவியில் நான் எப்போதும் போலவே இப்போதும் செய்தி வாசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். சரத்குமாருடன் சேர்ந்து நான் ரஜினியை சந்தித்ததற்கு யாரும் என்னை கண்டிக்கவில்லை. மேலும், அதிமுக தலைமையின் ஆணைக்கு எப்போதுமே நான் கட்டுப்பட்டு நடப்பவள். நடிகர் சங்க விவகாரத்திலும் நான் தலைமை சொல்படிதான் நடந்து வருகிறேன். அதனால் என்னை ஜெயா டிவியில் இருந்து நீக்கி விட்டதாக வெளியான செய்தி வெறும் வதந்தியே. இதை யாரும் நம்ப வேண்டாம் என்கிறார் பாத்திமா பாபு.