கர படத்தை தமிழகத்தில் வெளியிடும் ரெட் ஜெயன்ட் நிறுவனம் | பாய்ஸ் படத்தை ரீ ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் திட்டம் | ரசிங்க, விமர்சனம் செய்யாதீங்க : திஷா பதானி | ‛சிறை' அனிஷ்மாவின் மூன்றாவது தமிழ் படம் | எனக்கு கிடைத்த இரண்டு சகோதரர்கள் : பவன் கல்யாண் மனைவி நெகிழ்ச்சி | ரசிகர்களை உற்சாகப்படுத்த தியேட்டர்களில் வெளியாகும் திரிஷ்யம் 2 | டில்லியில் ஹேமமாலினியின் பாதங்களைத் தொட்டு வணங்கிய பாலகிருஷ்ணா | ‛ப்ரோ 2' ஸ்கிரிப்ட் ரெடி : பவன் கல்யாணின் கிரீன் சிக்னலுக்கு காத்திருக்கும் சமுத்திரக்கனி | சாய்பல்லவி நடித்த முதல் ஹிந்தி பாடலுக்கு வரவேற்பு | துரந்தர் 2 : படம் பார்க்காமல் பாராட்டிய ஆமிர்கான் |

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்த நிலையில், தற்போது வசி என்ற தனது நீண்ட நாள் காதலரை கடந்த வாரத்தில் திருமணம் செய்து கொண்டார். தனக்கு இரண்டாவது திருமணம் நடந்த புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ''திருமணத்திற்கு பிறகு ரொம்ப மகிழ்ச்சியாகவும் சந்தோசமாக இருக்கிறேன். காதல் கணவருடன் வாழ்க்கை ரொம்ப ஜாலியாக உள்ளது. மேலும், வாழ்க்கை என்பது சிறந்ததிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். முதலில் நண்பர்களாக பழக வேண்டும். அந்த ரிலேஷன்ஷிப்பில் நல்லதொரு நட்பு இருந்தால் அதில் எப்போதுமே ஒரு அழகான காதல் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கையில் நல்லதொரு பீலிங் இருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா.