ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விஜய் டிவியில் தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா, ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து ஆகியிருந்த நிலையில், தற்போது வசி என்ற தனது நீண்ட நாள் காதலரை கடந்த வாரத்தில் திருமணம் செய்து கொண்டார். தனக்கு இரண்டாவது திருமணம் நடந்த புகைப்படங்களை பிரியங்கா வெளியிட்ட பிறகுதான் அனைவருக்கும் தெரிய வந்தது.
இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது என்று பிரியங்காவிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளிக்கையில், ''திருமணத்திற்கு பிறகு ரொம்ப மகிழ்ச்சியாகவும் சந்தோசமாக இருக்கிறேன். காதல் கணவருடன் வாழ்க்கை ரொம்ப ஜாலியாக உள்ளது. மேலும், வாழ்க்கை என்பது சிறந்ததிலும் சிறந்ததாக இருக்க வேண்டும். முதலில் நண்பர்களாக பழக வேண்டும். அந்த ரிலேஷன்ஷிப்பில் நல்லதொரு நட்பு இருந்தால் அதில் எப்போதுமே ஒரு அழகான காதல் இருந்து கொண்டே இருக்கும். அப்படிப்பட்ட திருமண வாழ்க்கையில் நல்லதொரு பீலிங் இருக்கும்'' என்று தெரிவித்திருக்கிறார் பிரியங்கா.




