அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

சினிமா நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் ‛அருவி' தொடரில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். அருவி தொடர் முடிவடைந்த பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெளனம் பேசியதே தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த அவர் சில தினங்களுக்கு முன், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக நான் இந்த முடிவை எடுத்தேன். துளசி ரோல் எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்று கூறி விலகினார்.
இதனையடுத்து யார் துளசியாக நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்திரா தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை பௌசில் ஹிதயா தான் மெளனம் பேசியதே தொடரில் துளசியாக நடிக்க இருக்கிறார். இவர் கவின் நடித்த டாடா படத்திலும் நடித்தார். மேலும் ஒரு புதிய சீரியலிலும் நாயகியாக நடிக்கிறார்.