ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சினிமா நடிகர் லிவிங்ஸ்டனின் மகளான ஜோவிதா லிவிங்ஸ்டன் ‛அருவி' தொடரில் நடித்து சின்னத்திரையில் பிரபலமானார். அருவி தொடர் முடிவடைந்த பின் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் மெளனம் பேசியதே தொடரில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த அவர் சில தினங்களுக்கு முன், ஒரு நல்ல எதிர்காலத்திற்காக நான் இந்த முடிவை எடுத்தேன். துளசி ரோல் எனக்கு திருப்தியை கொடுக்கவில்லை என்று கூறி விலகினார்.
இதனையடுத்து யார் துளசியாக நடிக்கப் போகிறார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், இந்திரா தொடரின் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை பௌசில் ஹிதயா தான் மெளனம் பேசியதே தொடரில் துளசியாக நடிக்க இருக்கிறார். இவர் கவின் நடித்த டாடா படத்திலும் நடித்தார். மேலும் ஒரு புதிய சீரியலிலும் நாயகியாக நடிக்கிறார்.