கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! |
சித்து - ஸ்ரேயா அஞ்சன் தம்பதியினர் மீண்டும் ஜோடியாக நடிக்க தொடங்கியுள்ள சீரியல் 'வள்ளியின் வேலன்'. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த சாக்ஷி சிவா வெளியேறியிருக்கிறார்.
இதற்கு காரணம் என்னவென்றால், சாக்ஷி சிவா தான் நடிக்கும் அனைத்து சீரியல்களிலும் குறிப்பிட்ட டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ஒருவரையே தனக்காக பேச வேண்டும் என்று கண்டிஷன் போடுவாராம். இதற்காக இவர் தரப்பிலிருந்து சில அட்ஜெஸ்மெண்டுகளும் செய்து கொள்வாராம். இப்படியிருக்க இந்த தொடரில் ஆரம்பத்தில் சாக்ஷி சிவாவிற்காக அவர் சொன்ன அதே டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டையே பேசுவதற்கு புக் செய்துள்ளனர். ஆனால், அவருக்கு சம்பளம் அதிகம் என்பதால் அவரை நீக்கிவிட்டு வேறு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டிற்கு சென்றுள்ளனர். இதனால் ஏற்பட்ட பிரச்னையில் தான் சாக்ஷி சிவா சீரியலை விட்டு வெளியேறியிருக்கிறார்.