கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை | டாக்டர் ஆக ஆசைப்பட்ட ஹீரோயின் | அமானுஷ்ய படத்தில் நட்டி : வரலாற்று பின்னணியில் உருவாகும் ‛நீலி' | ஜூலை 4ல் 7 படம் ரிலீஸ்... எந்த படம் ஓடுது |
பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷிற்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால், அவர் நடிக்கும் எந்த சீரியலிலும் முழுவதுமாக நடித்துக் கொடுக்காமல் பாதியிலேயே ஏதோ சில காரணங்களால் வெளியேறி விடுகிறார் என ரசிகர்கள் வருந்தி வருகின்றனர். இந்நிலையில், மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்த திவ்யா கணேஷ், அந்த சீரியலை விட்டும் சில தினங்களுக்கு முன் விலகிவிட்டார். இதுகுறித்து பலரும் கேள்விகள் கேட்க, இன்ஸ்டாகிராமில் தற்போது திவ்யா கணேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர், 'நான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் மகாநதி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சீரியல் குழுவினர் எனக்கு பதிலாக வேறு நடிகையை தேடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி' என கூறியுள்ளார்.