மிருணாள் தாகூரை இயக்கும் தனுஷ் | பிளாஷ்பேக்: இயக்குநர் கே சுப்ரமணியத்தை நடிகராக்கிப் பார்த்த “அனந்தசயனம்” | ஹீரோவாக நடிக்கப் போகிறாரா சாய் அபயங்கர் | வெங்கடேஷ் உடன் ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ் | மே 1 பிறந்தநாளில் அஜித் 64 அறிவிப்பு வருமா ? | ராமதாஸ் பயோபிக் 'அய்யா' கைவிடப்பட்டதா? | தமிழகத்தின் முதல் டால்பி தியேட்டரைத் திறந்து வைத்த கமல்ஹாசன் | 2வது முறையாக பாலகிருஷ்ணா உடன் இணையும் காஜல் அகர்வால் | 'பெத்தி' படத்தில் சம்யுக்தா | 29 படத்தின் ஓடிடி உரிமையை கைபற்றிய நெட்பிளிக்ஸ் |

பிரபல சின்னத்திரை நடிகையான திவ்யா கணேஷிற்கு பலரும் ரசிகர்களாக இருந்து வருகின்றனர். ஆனால், அவர் நடிக்கும் எந்த சீரியலிலும் முழுவதுமாக நடித்துக் கொடுக்காமல் பாதியிலேயே ஏதோ சில காரணங்களால் வெளியேறி விடுகிறார் என ரசிகர்கள் வருந்தி வருகின்றனர். இந்நிலையில், மகாநதி தொடரில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்த திவ்யா கணேஷ், அந்த சீரியலை விட்டும் சில தினங்களுக்கு முன் விலகிவிட்டார். இதுகுறித்து பலரும் கேள்விகள் கேட்க, இன்ஸ்டாகிராமில் தற்போது திவ்யா கணேஷ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர், 'நான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பதால் மகாநதி ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை. சீரியல் குழுவினர் எனக்கு பதிலாக வேறு நடிகையை தேடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் போனதற்கு எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். உங்களுடைய ஆதரவிற்கு நன்றி' என கூறியுள்ளார்.