வசூல் கொட்டுது... : 10 நாளில் ரூ.552.70 கோடியை குவித்த ‛துரந்தர்' | ஹனி ரோஸின் ‛ரேச்சல்' படம் ரிலீஸ் ஒத்திவைப்பு | அரசு பேருந்தில் திரையிடப்பட்ட திலீப் திரைப்படம் ; பெண் பயணியின் எதிர்ப்பால் நிறுத்தம் | புத்தாண்டு தினத்தில் அஜித் 64வது பட அறிவிப்பு வெளியாகிறதா? | நான் அழுதால் நீங்கள் சிரிப்பீர்கள் ; சல்மான்கான் வெளிப்படை பேச்சு | கருப்பு படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் சேனல் | மதுப்பழக்கம் துவங்கியது புகுந்த வீட்டில் தான்; நடிகை ஊர்வசி | எம்ஜிஆர் நினைவுநாளில் 'வா வாத்தியார்' வருகிறார்…??? | தயாரிப்பாளர்கள் இல்லாமல் நடந்த 'அகண்டா 2' சக்சஸ் மீட் | பலாத்காரத்துக்கு திட்டமிட்டவர்களும் தண்டிக்கப்பட வேண்டும் : மஞ்சு வாரியர் |

'திருமதி செல்வம்' தொடரில் பூங்காவனம் கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்ற ஜெயமணி, தற்போது 'மலேசியா மாமா' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சிறகடிக்க ஆசை தொடரில் இவர் நடித்து வரும் மலேசியா மாமா கதாபாத்திரம், பூங்காவனம் கதாபாத்திரம் போலவே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அண்மையில் பகிர்ந்துள்ள ஜெயமணி, ''எனக்கு 7 வயதில் இருந்தே சினிமா கனவு இருந்தது. மாமா பாடகர் என்பதால் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. காலேஜ் படிப்பை முடித்ததும் குடும்ப சூழல் சரியில்லாத காரணத்தால் வேலைக்குச் சென்றேன். நான் இன்னும் நினைத்ததை சாதிக்கவில்லை. திருமதி செல்வம் தொடரில் நான் அவருடைய சாய்ஸ் இல்லை என்று இயக்குனர் ஓப்பனாக சொல்லிவிட்டார்.
நான் 40 சீரியல்களுக்கு மேல் இயக்குனராக வேலை பார்த்துள்ளேன். எனவே, அந்த இயக்குனரின் தேவை எனக்கு புரிந்தது. எனது முழு முயற்சியையும் போட்டேன். மக்கள் மனதில் பதிய வேண்டும் என்று முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடித்தேன். இப்போது ரசிகர்கள் என்னை மலேசியா மாமா என்று அழைக்கிறார்கள். என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. விரைவில் படமாக வெளிவரும்' என்று அந்த பேட்டியில் ஜெயமணி கூறியுள்ளார்.




