இண்டிகோ விவகாரத்தில் விமான ஊழியர்களை திட்டாதீர்கள் : சோனு சூட் ஆதரவு குரல் | பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் |

'திருமதி செல்வம்' தொடரில் பூங்காவனம் கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்ற ஜெயமணி, தற்போது 'மலேசியா மாமா' என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சிறகடிக்க ஆசை தொடரில் இவர் நடித்து வரும் மலேசியா மாமா கதாபாத்திரம், பூங்காவனம் கதாபாத்திரம் போலவே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தனது திரையுலக அனுபவங்கள் குறித்து அண்மையில் பகிர்ந்துள்ள ஜெயமணி, ''எனக்கு 7 வயதில் இருந்தே சினிமா கனவு இருந்தது. மாமா பாடகர் என்பதால் நடிப்பதற்கு வாய்ப்புகள் கிடைத்தது. காலேஜ் படிப்பை முடித்ததும் குடும்ப சூழல் சரியில்லாத காரணத்தால் வேலைக்குச் சென்றேன். நான் இன்னும் நினைத்ததை சாதிக்கவில்லை. திருமதி செல்வம் தொடரில் நான் அவருடைய சாய்ஸ் இல்லை என்று இயக்குனர் ஓப்பனாக சொல்லிவிட்டார்.
நான் 40 சீரியல்களுக்கு மேல் இயக்குனராக வேலை பார்த்துள்ளேன். எனவே, அந்த இயக்குனரின் தேவை எனக்கு புரிந்தது. எனது முழு முயற்சியையும் போட்டேன். மக்கள் மனதில் பதிய வேண்டும் என்று முழு அர்ப்பணிப்பையும் கொடுத்து நடித்தேன். இப்போது ரசிகர்கள் என்னை மலேசியா மாமா என்று அழைக்கிறார்கள். என்னிடம் ஒரு ஸ்கிரிப்ட் உள்ளது. விரைவில் படமாக வெளிவரும்' என்று அந்த பேட்டியில் ஜெயமணி கூறியுள்ளார்.