தம்பதிகளின் உறவுச் சிக்கலை பேசும் ‛மதர்' | சிங்கப்பூரில் மறு தணிக்கை செய்யப்பட்ட 'கூலி' | பிளாஷ்பேக் : நண்பருக்காக சம்பளம் வாங்காமல் நடித்த மோகன் | பிளாஷ்பேக் : அக்கா குடும்பத்திற்காக சினிமாவை துறந்த தங்கை | ஏஆர் முருகதாஸ் ஒரு 'சந்தர்ப்பவாதி' : சல்மான்கான் ரசிகர்கள் விமர்சனம் | ரஜினி, கமல் இணையும் படம் : லோகஷே் கனகராஜ் மாற்றமா? | பிசாசு 2 எப்போது ரிலீஸ் : ஆண்ட்ரியா சொன்ன பதில் | அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் |
முன்னணி சேனலான ஜீ தமிழ் தற்போது புதிய தொடர்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறது. முன்பு ஏராளமான டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பியது. பின்னர் நேரடி சீரியல்களுக்கு மாறியது. என்றாலும் டப்பிங் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் இருப்பதால் மீண்டும் டப்பிங் சீரியல்களை களம் இறக்கி உள்ளது.
அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை முதல் 'நானே வருவேன்', 'லட்சுமி கல்யாணம்' என்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. திங்கள் முதல் சனி வரை பகல் 3 மணிக்கு 'நானே வருவேன்' சீரியலும், 'லட்சுமி கல்யாணம்' தொடர் இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தொடர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவைகள் ப்ரைம் நேரத்திற்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. 'லட்சுமி கல்யாணம்' தொடர் ஒரு நல்ல மனிதனை வாழ்க்கை துணையாக அடைய போராடும் இளம் பெண்ணின் கதையாகவும், 'நானே வருவேன்' தொடர் முக்கோண காதல் கதையை கொண்ட தொடராவும் இருக்கிறது.