மைசூரில் பிலிம் சிட்டி: கர்நாடக முதல்வர் அறிவிப்பு | 'ஊர் பூரா டாஸ்மாக்கை திறந்து வச்சிட்டு குடிக்கிறவனை தப்பு சொல்வதா?': பாட்டல் ராதா படத்தின் டீசர் வெளியானது! | ‛தீரன் அதிகாரம் இரண்டு' : மீண்டும் கார்த்தி - வினோத் கூட்டணி | ரூ.100 கோடி வசூலை நெருங்கியதா 'மகாராஜா'? | விதி விளையாடிவிட்டது : தர்ஷன் பற்றி மனம் திறந்த சிவராஜ்குமார் | நாகேஷ் - சிவகார்த்திகேயன் பாணியில் கதாநாயகனாக அறிமுகமாகும் பிக்பாஸ் ராஜூ | பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்திக் | ரூ.3 லட்சத்திற்கு ஏலம்போன மம்முட்டி எடுத்த புகைப்படம் | சத்ருகன் சின்ஹா மருத்துவமனையில் அனுமதி | தொடர்ந்து அவதூறு பரப்புகிறார் : சுசித்ரா மீது கார்த்திக் குமார் நீதிமன்றத்தில் புகார் |
முன்னணி சேனலான ஜீ தமிழ் தற்போது புதிய தொடர்களை ஒளிபரப்புவதில் ஆர்வம் காட்டி வருகிறது. முன்பு ஏராளமான டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பியது. பின்னர் நேரடி சீரியல்களுக்கு மாறியது. என்றாலும் டப்பிங் சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் வட்டம் இருப்பதால் மீண்டும் டப்பிங் சீரியல்களை களம் இறக்கி உள்ளது.
அந்த வகையில் கடந்த திங்கள்கிழமை முதல் 'நானே வருவேன்', 'லட்சுமி கல்யாணம்' என்று இரண்டு டப்பிங் சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. திங்கள் முதல் சனி வரை பகல் 3 மணிக்கு 'நானே வருவேன்' சீரியலும், 'லட்சுமி கல்யாணம்' தொடர் இரவு 10.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. தொடர்களுக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அவைகள் ப்ரைம் நேரத்திற்கு மாற்றப்படும் என்று தெரிகிறது. 'லட்சுமி கல்யாணம்' தொடர் ஒரு நல்ல மனிதனை வாழ்க்கை துணையாக அடைய போராடும் இளம் பெண்ணின் கதையாகவும், 'நானே வருவேன்' தொடர் முக்கோண காதல் கதையை கொண்ட தொடராவும் இருக்கிறது.