ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

சின்னத்திரையில் நம்பர் 1 நாயகியாக வலம் வந்தவர் நடிகை ரச்சிதா மஹாலெட்சுமி. சரவணன் மீனாட்சி தொடர் ரச்சிதாவுக்கு மிகப்பெரிய புகழையும் மார்க்கெட்டையும் பெற்று தந்தது. கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரச்சிதா, இப்போது வரை எந்தவொரு புராஜெக்டிலும் கமிட்மெண்ட் கொடுக்கவில்லை. ஆனால், போட்டோஷூட்களில் டிரெடிஷ்னல், மாடர்ன் என அனைத்து உடைகளிலும் அழகிய பதுமையாக ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அண்மையில் அளித்த பேட்டியில், ''ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டும் என்றால் ஆண்கள் 5 நிமிடத்தில் கிளம்பிவிடுவார்கள். ஆனால், பெண்களுக்கோ 30 நிமிடங்கள் வரை ஆகும். அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் எப்போதும் தங்களது உடை மற்றும் தோற்றத்திற்காக அதிக கவனம் செலுத்துவதால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது'' என்று பேசியுள்ளார்.