விஜய் ஆண்டனியின் 'சக்தி திருமகன்' படத்தை பாராட்டிய இயக்குனர் ஷங்கர்! | பிளாஷ்பேக்: சித்ராவை ஏமாற்றிய முதல் பாடல் | படம் இயக்கவே சினிமாவிற்கு வந்தேன்: செம்மலர் அன்னம் | சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு வரும் இயக்குனர் | 10 கோடிக்கு கார் வாங்கிய அட்லி | பிளாஷ்பேக்: தமிழில் ரீமேக் ஆன சார்லி சாப்ளின் படம் | பிளாஷ்பேக்: சாண்டோ எம் எம் ஏ சின்னப்ப தேவருக்கு அதிர்ஷ்டத்தை வழங்கிய “ஆராய்ச்சி மணி” | 50 கோடி வசூலைக் கடந்த 'பைசன்' | தமிழில் இயக்குனர் ஆனார் ஷாலின் ஜோயா : 90களில் நடக்கும் கதை, பிரிகிடா ஹீரோயின் | பொங்கல் ரேசில் இணைந்த இன்னொரு படம் |

பிரபல நடிகை கேப்ரில்லா சார்ல்டன். குழந்தை நட்சத்திரமாக சின்னத்திரையிலும், சினிமாவிலும் அறிமுகமானார். பிக்பாஸ் என்ட்ரிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஈரமான ரோஜாவே சீசன் 2வில் ஹீரோயினாக நடித்தார். தற்போது சீரியல்களில் ஹீரோயினாக நடிக்க கேப்ரில்லாவுக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அண்மையில் கேப்ரில்லா அளித்துள்ள பேட்டியில் சிறு வயதில் நடிக்க வந்த புதிதில் தனக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார். அதில், 'நான் 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது என்னுடைய புகைப்படத்தை யாரோ தவறாக மார்பிங் செய்து வெளியிட்டார்கள். அந்த புகைப்படத்தில் இருப்பது நானே கிடையாது. ஆனால், புதிதாக பார்ப்பவர்கள் அது நான் தான் என்று நினைப்பார்கள். அந்த சமயத்தில் நான் ரொம்பவே கஷ்டப்பட்டேன். பள்ளியில் எல்லோரும் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். இதனால் மூன்று நாட்கள் பள்ளிக்கு செல்லவில்லை. அந்த சம்பவத்திலிருந்து வெளியே வருவதற்கே எனக்கு சில நாட்கள் ஆனது' என்று கூறியுள்ளார்.