சிரஞ்சீவி படத்தில் இத்தனை இளம் நடிகைகளா? | தள்ளிப்போகும் தனி ஒருவன் 2? | ஜூலை மாதத்தில் துவங்கும் கலகலப்பு 3 படப்பிடிப்பு | தந்தையின் நண்பர்கள் புகைப்படம் பகிர்ந்து மம்முட்டி படத்திற்கு வாழ்த்து கூறிய சிபிராஜ் | மலையாள படங்களில் பெண்கள் எங்கே? - அஞ்சலி மேனன் கேள்வி | தமிழ் தெரியாத கன்னட வில்லனை மலையாளி ஆக்கிய டர்போ இயக்குனர் | பிரபாஸ், பிரசாந்த் நீல் கருத்து மோதல் : 'சலார் 2'க்கு தொடரும் சிக்கல் ? | மெட்ரோ கூட்டணியில் உருவாகும் ‛நான் வைலன்ஸ்' | உ.பி. அரசின் பிலிம் சிட்டி : டெண்டரில் வெற்றி பெற்ற போனி கபூர் | பெங்களூரு போதை பார்ட்டி : நடிகை ஹேமா உள்ளிட்ட 86 பேர் சோதனை 'பாசிட்டிவ்' |
சீரியல்களில் வில்லியாக பல வருடங்களாக கலக்கி வருகிறார் கவுதமி வேம்புநாதன். இவர் அண்மையில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் சீரியலில் வில்லியாக நடிப்பதால் நிஜ வாழ்வில் தன் மகனின் திருமண வாழ்க்கைக்கே பிரச்னை வந்ததாக கூறியுள்ளார். கிட்டதட்ட 18 வருடங்களாக பல்வேறு சீரியல்களில் நடித்துள்ள கவுதமி வேம்புநாதன் வில்லி மற்றும் காமெடி ரோல்களில் நடித்து வருகிறார். கவுதமி வில்லியாக நடிப்பதை பார்த்து பலர் இவருடன் பேசவே பயப்படுவார்களாம்.
அதிலும் அவருடைய சொந்த மகனே 'அம்மா நீ இப்படி நடிப்பதால் எனக்கு திருமணம் ஆகாதோன்னு தோனுது' என்று சொல்லியிருக்கிறார். அதுபோலவே ஒரு பெண் வீட்டில் கவுதமியின் குடும்ப புகைப்படத்தை பார்த்து ‛இந்தம்மா பெரிய வில்லியாச்சே' என பயந்து இருக்கிறார்களாம். இந்த சம்பவத்தை நேர்காணலில் மிகவும் ஜாலியாக பகிர்ந்து கொண்ட கவுதமி வேம்புநாதன் நிஜ வாழ்வில் உண்மையாகவே பழகுவதற்கு மிகவும் இனிமையானவராம்.