கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான கேப்டன் விஜயகாந்த் கடந்த வாரம் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசியல் பிரபலங்கள், திரைபிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்த குவிந்தனர். இந்நிலையில், அவரது இறப்பு அன்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாத பலரும் தற்போது அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல பாடகர்களான செந்தில் கணேஷ், ராஜலெட்சுமி தம்பதியினர் விஜயகாந்த் காலமான போது தாங்கள் வெளிநாட்டில் கச்சேரியில் மாட்டிக்கொண்டதாகவும், எனவே அன்று அஞ்சலி செலுத்த வரமுடியவில்லை என்று கூறியுள்ளனர்.
தற்போது அவரது நினைவிடம் முன் அஞ்சலி செலுத்திய அவர்கள், அதன்பின் அளித்த பேட்டியில், 'ஒரு தலைவன் இப்படி தான் இருக்க வேண்டு என்று காண்பித்தவர். கடையெழு வள்ளல்களை பற்றி கேள்வி தான் பட்டிருக்கிறோம். பார்த்ததில்லை. ஆனால், கேப்டனை பார்த்திருக்கிறோம். இதற்கு பிறகு இப்படி ஒரு மனிதனை பார்ப்போமா? என்று தெரியவிலை. அவர் காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்று சொல்வதே பெருமை' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.