ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் | இந்த வார ரிலீஸ் : தியேட்டர்களைக் காப்பாற்றும் 'படையப்பா' | பிறந்தநாள் வாழ்த்து கூறியவர்களுக்கு ரஜினிகாந்த் நன்றி |

எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி. தவிரவும் சினிமா, வெப் தொடர்கள் என பிசியாக வலம் வரும் இவர், ஒரு பி.எச்டி பட்டதாரி ஆவார். மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று வரும் காயத்ரி அடிக்கடி ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ விவகாரம் குறித்து 'நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை குறித்து இப்போது சொல்லி வருகிறார்களே?' என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காயத்ரி 'ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அப்போதே அதை பற்றி சொல்லி விட வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு சொல்லி ஆறுதல் தேடுவது மிகவும் தப்பு' என்று கூறியுள்ளார். மேலும், 'அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைகளுக்கு காரணம் பெண்களின் வீக்னஸ் தான். மேலும் அட்ஜெஸ்மெண்ட் செய்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அதை பற்றி ஏன் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்?' என்று முன்னதாக அளித்த சில பேட்டிகளில் காயத்ரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




