ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமியின் தந்தை வெள்ளிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். சக நடிகரான தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரச்சிதா, தனது பெற்றோருக்காக தான் கணவருடன் சண்டை ஏற்பட்டதாக முன்பாக தெரிவித்திருந்தார். கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தனது தந்தையை பார்த்துக் கொள்வதற்காக தான் பல வாய்ப்புகளையும் ரச்சிதா தவிர்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் தனது தந்தையின் மரணத்தால் ரச்சிதா சோகத்தில் மூழ்கியுள்ளார். ரச்சிதாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் சக நடிகர்கள் உட்பட ரசிகர்கள் பலரும் தற்போது ஆறுதல் கூறி வருகின்றனர்.




