அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
எதிர்நீச்சல் தொடரின் முக்கிய நடிகரான மாரிமுத்துவின் இழப்பு ரசிகர்கள் பலரையும் சோகமடைய செய்துள்ளது. எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாரிமுத்து நடித்த காட்சிகளில் அவருக்கு பதிலாக வேறொரு நபரை டப்பிங் பேச வைத்தனர். ஆனால், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கார்டூன் குரல் போல் இருப்பதாக கிண்டலடித்தனர்.
இந்நிலையில், மாரிமுத்துவுக்காக டப்பிங் பேசிய வெங்கட் ஜனா மாரிமுத்துவுக்காக டப்பிங் பேச ரொம்பவே பயந்ததாக கூறியுள்ளார். அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 'மாரிமுத்து சார் அவர் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் தான் முதன் முதலில் என்னை டப்பிங் பேச வைத்தார். இப்போது அவருக்காக டப்பிங் பேச வேண்டிய நிலைமை வந்துவிட்டது. மாரிமுத்து போலவே ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது. ரொம்பவே பயந்தேன். காரணம் குணசேகரன் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்கான கேரக்டர். அதில் நான் பேசி எதுவும் சொதப்பி விடக்கூடாது என பயந்தேன். அதன்பிறகு இயக்குநர் திருச்செல்வம் கொடுத்த தைரியத்தால் தான் பேசினேன். மாரிமுத்து விட்டு போனதை நான் முடித்து வைத்ததை போன்று ஒரு சின்ன நிம்மதி இருக்கிறது. இதுவே நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.