சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் | ‛பார்டர் 2'வில் தில்ஜித் தோசன்ஜ் முதல் பார்வை வெளியீடு |

எதிர்நீச்சல் தொடரின் முக்கிய நடிகரான மாரிமுத்துவின் இழப்பு ரசிகர்கள் பலரையும் சோகமடைய செய்துள்ளது. எதிர்நீச்சல் தொடருக்காக டப்பிங் பேசிக் கொண்டிருந்த போதுதான் அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாரிமுத்து நடித்த காட்சிகளில் அவருக்கு பதிலாக வேறொரு நபரை டப்பிங் பேச வைத்தனர். ஆனால், அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. கார்டூன் குரல் போல் இருப்பதாக கிண்டலடித்தனர்.
இந்நிலையில், மாரிமுத்துவுக்காக டப்பிங் பேசிய வெங்கட் ஜனா மாரிமுத்துவுக்காக டப்பிங் பேச ரொம்பவே பயந்ததாக கூறியுள்ளார். அவர் அண்மையில் அளித்த ஒரு பேட்டியில், 'மாரிமுத்து சார் அவர் இயக்கிய கண்ணும் கண்ணும் படத்தில் தான் முதன் முதலில் என்னை டப்பிங் பேச வைத்தார். இப்போது அவருக்காக டப்பிங் பேச வேண்டிய நிலைமை வந்துவிட்டது. மாரிமுத்து போலவே ரொம்ப கஷ்டமாக தான் இருந்தது. ரொம்பவே பயந்தேன். காரணம் குணசேகரன் கேரக்டர் ரொம்பவே ஸ்ட்ராங்கான கேரக்டர். அதில் நான் பேசி எதுவும் சொதப்பி விடக்கூடாது என பயந்தேன். அதன்பிறகு இயக்குநர் திருச்செல்வம் கொடுத்த தைரியத்தால் தான் பேசினேன். மாரிமுத்து விட்டு போனதை நான் முடித்து வைத்ததை போன்று ஒரு சின்ன நிம்மதி இருக்கிறது. இதுவே நான் அவருக்கு செலுத்தும் அஞ்சலியாக நினைக்கிறேன்' என்று நெகிழ்ச்சியாக கூறியுள்ளார்.