கல்வான் பள்ளத்தாக்கு மோதல் கதையில் உருவாகும் படத்தில் சல்மான் கான்! | தக்லைப் படத்தை அடுத்து தெலுங்கு நடிகரை இயக்கும் மணிரத்னம்! | வாடிவாசல் படத்திற்காக 100 சதவீத அர்ப்பணிப்பை கொடுப்பேன்: வெற்றிமாறன் வெளியிட்ட தகவல் | சென்னை விமான நிலையத்தில் சந்தித்துக் கொண்ட விஷால் - விஜய் சேதுபதி! | ராமாயணா படத்தில் யஷ்-க்கு ஜோடியாகும் காஜல் அகர்வால்! | பாகுபலி கதாசிரியரின் அறிவுறுத்தலின்படி கண்ணப்பாவில் மீண்டும் சேர்க்கப்பட்ட மோகன்லால் கதாபாத்திரம் | வாய் பேசா கதாபாத்திரத்தில் சிறை கைதியாக நடித்துள்ள ரவீணா ரவி | அம்மாவின் 2வது திருமணம் ஏற்படுத்திய பாதிப்பு: மனம்திறந்த லிஜோ மோல் ஜோஸ் | பஸ் டிரைவர்களின் பல்லை உடைப்பேன் ; சுரேஷ்கோபி மகன் ஆவேசம் | ஜெயிலர்-2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்து வாழ்த்து பெற்ற மலையாள நடிகர் |
விஜய் டிவி சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ள ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் தற்போது தெலுங்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஷ்ரவந்திகா விசுவல் கம்யூனிகசேன் படித்து முடித்த பின் ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். அதன் பின் விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்', 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், தமிழில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த ஷ்ரவந்திகாவுக்கு தெலுங்கு சீரியலில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தெலுங்கு சேனலில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'ஜபிலி கோசம் ஆகாசமல்லே' என்ற தொடரில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஷ்ரவந்திகா நடித்து வருகிறார். அதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் தெலுங்கு ரசிகர்களுடன் தமிழ் ரசிகர்களும் சேர்ந்து ஷ்ரவந்திகாவை வாழ்த்தி வருகின்றனர்.