ஏப்ரல் 27ல் தொடங்குகிறது சேயோன் | அபிஷேக் பச்சனின் வரலாற்று படத்தில் கெஸ்ட் ரோலில் சல்மான்கான் | கென் கருணாஸ் சினிமாவின் சொத்து : யூத் படம் பார்த்துவிட்டு ரிஷப் ஷெட்டி பாராட்டு | பிளாஷ்பேக்: பாலைவனத்தில், பணத்தை வாரி இறைத்து, படப்பிடிப்பு நடத்திய எம் ஜி ஆரின் வெற்றிச் சித்திரம் | 17 நாட்களிலேயே 200 கோடி வசூலித்த 'வாழ 2' | பேட்ரியாட்டில் நாலு ஹீரோ இல்லை, இரண்டு பேர் தான் : மம்முட்டி | ஒரு வாரத்தில் நடிகர் பார்த்திபனுக்கு 'சாதி மதம் அற்றவர்' சான்றிதழ்! ஐகோர்ட் உத்தரவு | 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, மிஸ்டர் எக்ஸ்' படங்களின் வசூல் விவரம்! | ‛கலை அரசன்', தனுஷிற்கு புதுபட்டம் | கதை நாயகனாக நடிக்கும் காளி வெங்கட் |

விஜய் டிவி சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ள ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் தற்போது தெலுங்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஷ்ரவந்திகா விசுவல் கம்யூனிகசேன் படித்து முடித்த பின் ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். அதன் பின் விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்', 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், தமிழில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த ஷ்ரவந்திகாவுக்கு தெலுங்கு சீரியலில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தெலுங்கு சேனலில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'ஜபிலி கோசம் ஆகாசமல்லே' என்ற தொடரில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஷ்ரவந்திகா நடித்து வருகிறார். அதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் தெலுங்கு ரசிகர்களுடன் தமிழ் ரசிகர்களும் சேர்ந்து ஷ்ரவந்திகாவை வாழ்த்தி வருகின்றனர்.