ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.ஆர்.கிருஷ்ணா. திரைப்படங்களில் பாடுவதோடு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஓன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சினிமா பாடகர் ஸ்ரீராமின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அழைப்பு வந்ததன் பேரில் இசைநிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் என்னைப் பார்த்ததும். அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டல் விடுத்தார், உடனே அவரிடம், நான் ஏன் செல்ல வேண்டும் எனக் கேட்டதற்கு, உன்னைக் கொல்வதற்காக 10 பேரை ஏற்பாடு செய்துள்ளேன் எனக் கூறியதுடன் அங்கிருந்த சில நபர்களைக் காண்பித்து, அவர்கள் உன்னைக் கொல்லாமல் விடமாட்டார்கள், உன் நாட்களை எண்ணிக்கொள் என்று மிரட்டினார்.
நடிகர் ஈஸ்வர் ரகுநாதனுக்கும், எனக்கும் எந்த வித முன்பகையோ, விரோதமோ இல்லை. அவரிடம் பேசி பல ஆண்டுகளாகின்றன. எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு தனது புகார் மனுவில் கிருஷ்ணா கூறியிருக்கிறார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.