மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் பி.ஆர்.கிருஷ்ணா. திரைப்படங்களில் பாடுவதோடு மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் கிருஷ்ணா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் ஓன்றை அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: தி.நகர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சினிமா பாடகர் ஸ்ரீராமின் இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அதற்கு அழைப்பு வந்ததன் பேரில் இசைநிகழ்ச்சியைப் பார்க்கச் சென்றேன்.
அப்போது இசை நிகழ்ச்சிக்கு வந்திருந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் என்னைப் பார்த்ததும். அங்கிருந்து சென்று விடுமாறு மிரட்டல் விடுத்தார், உடனே அவரிடம், நான் ஏன் செல்ல வேண்டும் எனக் கேட்டதற்கு, உன்னைக் கொல்வதற்காக 10 பேரை ஏற்பாடு செய்துள்ளேன் எனக் கூறியதுடன் அங்கிருந்த சில நபர்களைக் காண்பித்து, அவர்கள் உன்னைக் கொல்லாமல் விடமாட்டார்கள், உன் நாட்களை எண்ணிக்கொள் என்று மிரட்டினார்.
நடிகர் ஈஸ்வர் ரகுநாதனுக்கும், எனக்கும் எந்த வித முன்பகையோ, விரோதமோ இல்லை. அவரிடம் பேசி பல ஆண்டுகளாகின்றன. எனவே, எனக்கு கொலை மிரட்டல் விடுத்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர் ரகுநாதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு தனது புகார் மனுவில் கிருஷ்ணா கூறியிருக்கிறார். இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.