‛டிமான்டி காலனி 3' படப்பிடிப்பை தொடங்கிய அஜய் ஞானமுத்து | முதல் படத்திலேயே அதிர்ச்சி தோல்வியை சந்தித்த சூர்யா சேதுபதி | டாக்சிக் படத்தில் இணைந்த அனிருத் | ‛இவன் தந்திரன் 2'ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | பூரி ஜெகன்னாத் படத்தில் விஜய் சேதுபதி; ஹைதராபாத்தில் துவங்கியது படப்பிடிப்பு | தயாரிப்பாளர் கே.ஜே.ஆர் ராஜேஷின் கதாநாயகனாக 2வது பட அறிவிப்பு | 'காந்தாரா சாப்டர் 1' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | இல்லாத இடத்தை குறிப்பிட்டு விளம்பரம் நடித்து சிக்கலில் சிக்கிய நடிகர் மகேஷ்பாபுவுக்கு நோட்டீஸ் | கில்லர் படத்திற்காக 4வது முறையாக இணைந்த எஸ்.ஜே.சூர்யா, ஏ.ஆர்.ரஹ்மான் | லிஜோவின் அப்பாவித்தனம் அவரை நாயகியாக்கியது: 'பிரீடம்' இயக்குனர் சத்யசிவா |
எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகர் மாரிமுத்து. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரமாகவும், மீம் மெட்டீரியலாகவும் இணையதளத்தில் டிரெண்டாகி வரும் மாரிமுத்து, எதிர்நீச்சல் தொடரில் நடித்து வருவது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில் அவர், 'திருச்செல்வத்திடம் மூன்று மணிநேரம் கதை கேட்டு தான் நடிக்கவே ஒப்புகொண்டேன். இந்த சீரியல் 1500 எபிசோடை கடக்கும் என திருச்செல்வம் கூறியிருக்கிறார். அதனால் வேறு சீரியலில் நடிக்கும் வாய்ப்பு இல்லை. வேறு வாய்ப்புகள் அமைந்தால் பார்க்கலாம். வில்லன்களை பெண்கள் ரசிப்பது ரொம்பவே ஆச்சரியம். ஆனால், இந்த சீரியலால் பெண்களுக்கு என்னை மிகவும் பிடித்திருக்கிறது.' என்று கூறியுள்ளார். மாரிமுத்து தற்போது சினிமாவில் இந்தியன் 2, ஜெயிலர் உட்பட சில பெரிய பட்ஜெட் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.