சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
திரைப்படங்களை ஸ்பூப் செய்யும் காமெடி நிகழ்ச்சியான 'லொள்ளு சபா' நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜீவா. திரைப்படங்களிலும், சீரியல்களிலும் ஒரு காலத்தில் பிசியாக நடித்து வந்தார். அவர் தற்போது தமிழருவி மணியன் ஆரம்பித்துள்ள காமராஜர் மக்கள் கட்சியில் மாநில இளைஞரணி தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
தனது அரசியல் பிரவேசம் பற்றி கூறிய அவர், 'நான் எப்படி ரஜினி ரசிகனோ, அதேபோல் அடிப்படையில் எனக்கு காமராஜரை பிடிக்கும். தமிழக அரசியலை பொறுத்தவரை காமராஜர் ஆட்சிக்கு பிறகிருந்தே வெற்றிடம் உள்ளது. இன்றும் நல்ல ஆட்சிக்கு உதாரணம் காமராஜர் ஆட்சியை தான் உதாரணம் சொல்கிறோம். திராவிட கட்சிகளின் தலைவர்கள் கூட 'அண்ணா ஆட்சி', 'எம்.ஜி.ஆர் ஆட்சி' என சொல்வது இல்லை. காமராஜர் மக்கள் கட்சியை தமிழகம் முழுக்க கொண்டுபோய்ச் சேர்க்க வேலைகள் தொடங்கியுள்ளோம்.
அடுத்தாண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளோம்' என கூறியுள்ளார். ஜீவா அரசியலில் நுழைந்திருக்கும் தகவல் அவரது ரசிகர்கள் பலருக்கும் தெரியாத நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியை பார்த்து பலரும் ஆச்சரியமடைந்துள்ளனர்.