என்னது நான் ஹீரோவா... : டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் மறுப்பு | மாமன் படத்தை பின்பற்றும் '3BHK' | கல்லூரிகளில் படத்தை புரொமோஷன் செய்ய விருப்பமில்லை : சசிகுமார் | ரன்வீர் சிங் ஜோடியான சாரா அர்ஜுன் | 100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் |
ஜீ தமிழில் ஒளிபரப்பான 'என்றென்றும் புன்னகை' சீரியலின் மூலம் அறிமுகமான நிதின் கிரிஷ், தற்போது செவ்வந்தி தொடரில் கார்த்திக் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். இந்த தொடரில் ஹீரோவாக நடித்து வந்த ராகவ் இறந்து போனது போல் காண்பிக்கப்பட்டதால், நிதின் கிரிஷ் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கும் என்று தான் ரசிகர்கள் நம்பினர்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் நிதின் கிரிஷ் செவ்வந்தி தொடரிலிருந்து விலகுவதாக தனது இண்ஸ்டாகிராமில் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த பதிவில், 'கனத்த இதயத்துடன் செவ்வந்தி சீரியலிலிருந்து வெளியேறுகிறேன். என்னிடம் சொல்லியது போல் எனது கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவத்தை தரவில்லை. நடிகராக என்னுடைய திறமையை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கிடைக்கவில்லை. புரொமோஷன்களுக்கு கூட அழைக்கவில்லை. விரைவில் என்னுடைய இரண்டு புதிய ப்ராஜெக்ட் பற்றி அறிவிக்கிறேன்' என்று பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவை சில மணி நேரங்களுக்குள் நீக்கிவிட்டு மற்றொரு பதிவில் லீகல் காரணங்களுக்காக பழைய பதிவை நீக்கியதாகவும், புதியதை நோக்கி நகர்ந்து செல்வதற்கான நேரம் விரைவில் இரண்டு புதிய அறிவிப்புகள் வரும் என்றும் செவ்வந்தி சீரியலை விட்டு விலகியதை நிதின் க்ரிஷ் உறுதிபடுத்தியுள்ளார்.