தீவிர கதை விவாதத்தில் படையப்பா 2ம் பாகம் : ரஜினிகாந்த் புதிய தகவல் | ஜனநாயகன் : வியாபாரத்தில் நீடிக்கும் தடுமாற்றம் ? | அதிசயம், ஆனால், உண்மை… : 'படையப்பா' ரீரிலீஸுக்கு ரஜினிகாந்த் பேட்டி | கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக கலக்கி வந்த தேவயானி, சின்னத்திரையிலும் தடம் பதித்த தொடர் கோலங்கள். இயக்குநர் திருச்செல்வத்துக்கும் இந்த தொடர் மிகப்பெரிய புகழை பெற்று தந்தது. சொல்லப்போனால் தற்போது அவர் இயக்கத்தில் சக்கப்போடு போடும் 'எதிர்நீச்சல்' தொடருக்கே முன்னோடி 'கோலங்கள்' தான் என இப்போதும் அந்த சீரியலை ரசிகர்கள் பெருமையாக பேசி வருகின்றனர். கோலங்கள் தொடரின் இரண்டாவது பாகம் குறித்து முன்னதாக பலமுறை செய்திகள் வெளியானது. ஆனால், இன்று வரை அப்டேட் எதுவும் சரிவர தெரியவில்லை.
இந்நிலையில், திருச்செல்வம் அண்மையில் அளித்த பேட்டியின்போது கோலங்கள்-2 வருமா? என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த திருச்செல்வம் 'கண்டிப்பாக கோலங்கள்-2 வரும். தயாரிப்பு நிறுவனம் வேறு என்பதால் தாமதமாகிறது. கோலங்கள்-2 கண்டிப்பாக இதற்கு முன்பு ஒளிபரப்பான சேனலில் தான் வரும்' என்று கூறியுள்ளார். அவரது பதில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.